அடித்தது ஜாக்பாட்: ஆர்யா சகோதரிக்கு எத்தனை கோடி பரிசு தெரியுமா?

  • IndiaGlitz, [Friday,February 05 2021]

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக 32 கோடி லாட்டரி சீட்டு பரிசு கிடைத்திருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

பிரபல தமிழ் நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனா தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு கத்தார் நாட்டில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கத்தார் நாட்டில் விற்கப்படும் லாட்டரி சீட்டுக்களை இந்தியர்கள் உள்பட பலரும் விருப்பத்துடன் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். அந்த வகையில் ஜனவரி 26-ஆம் தேதி நடிகர் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவும் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். இந்த லாட்டரி சீட்டின் முதல் பரிசு 15 மில்லியன் திர்காம் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 32 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த லாட்டரியின் குலுக்கல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் ஆர்யாவின் சகோதரி தஸ்லீனாவுக்கு முதல் பரிசாக ரூ.32 கோடி கிடைத்துள்ளது. இதனை அடுத்து அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இந்த லாட்டரி குலுக்கலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசும் இந்தியர்களுக்கு தான் கிடைத்துள்ளது என்பதும் இதில் இரண்டாவது பரிசை வென்ற பிரேம் என்பவர் சமீபத்தில்தான் வேலை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ஆர்யாவின் சகோதரிக்கு ஜாக்பாட் பரிசாக ரூபாய் 32 கோடி பரிசு கிடைத்துள்ள தகவல் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
 

More News

ஃபிரெண்ட்ஷிப் தான் சொத்து நமக்கு: மீண்டும் பாலாவுடன் இணைந்த ஷிவானி?

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியுடன் நெருக்கமாக இருந்த ஷிவானி நாராயணன் அவரது கைக்குள் இருந்ததால்தான் தனது தனித்தன்மையை இழந்ததாகவும் விமர்சனம் செய்யப்பட்டார்

திருமணமான ஒருசில மாதங்களில் கணவரை பிரிந்த தமிழ் நடிகை!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை ஒருவர் திருமணமான ஒரு சில மாதங்களில் கணவரை விவாகரத்து செய்துவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 ஆண்டுகள் கழித்து ஷரபோவாவிடம் மன்னிப்பு கோரும் இந்திய டுவிட்டர் ரசிகர்கள்!

ஐந்து ஆண்டுகள் கழித்து பிரபல டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவிடம் இந்திய டுவிட்டர் ரசிகர்கள் மன்னிப்பு கேட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள்… சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னை விமான நிலையத்தில் 2½ கோடி மதிப்பிலான போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது.

அஸ்வின் மீது காதலா? 'குக் வித் கோமாளி' சுனிதாவின் வைரல் வீடியோ!

ரசிகர்களின் மாபெரும் ஆதரவை பெற்று விஜய் டிவியில் தற்போது ஒளிபரப்பாகும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் கோமாளிகளில் ஒருவர் சுனிதா. இவரும் ஷிவாங்கியும் மாறி மாறி அஸ்வினை காதலிப்பது