எக்ஸாம் எழுதி மெயில் அனுப்பினேன், டெலிட் பண்ணிட்டாங்க: அஜித் பட நடிகையின் புலம்பல்

  • IndiaGlitz, [Friday,September 25 2020]

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவருமான அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் சென்னைப் பல்கலைக்கழகம் மீது புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் எம்.ஏ. டான்ஸ், ஃபைனல் இயர் படித்து வருகிறேன். பல்கலைக்கழகத்தில் எனது தேர்வு குறித்து போன் மூலம் என்ன விவரம் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை. மாறாக அவமதிப்பு செய்கிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு மெயிலில் வினாத்தாள் வரும் என்றார்கள். ஆனால் 2.30 மணிக்கு வினாத்தாள் வந்தது. நான் என்னுடன் படிக்கும் ஒருவரிடம் இருந்து ஏற்கனவே வினாத்தாள் வாங்கி பதில் எழுதி மெயில் அனுப்பிவிட்டேன். ஆனால் நீங்கள் அனுப்ப வேண்டிய மெயில் இதுதான் என்று ஒரு புதிய மெயில் ஐடியை கொடுத்தார்கள். அப்படியெனில் நான் ஏற்கனவே விடை எழுதிய அனுப்பிய மெயில் என்ன ஆச்சு? என்று கேட்டபோது அதை டெலிட் செய்துவிட்டோம் என்று எளிதாக கூறுகின்றார்கள்.

நான் கஷ்டப்பட்டு படித்து எழுதி மெயில் அனுப்பியதை அவ்வளவு எளிதாக டெலிட் செய்துவிட்டோம் என்று அவர்கள் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? இதுகுறித்து விளக்கம் கேட்டால் தேர்வு ஒரு ஃபார்மாலிட்டிதான் எல்லாரையும் பாஸ் ஆக்கிவிடுவோம் என்று ஒருவர் பொறுப்பின்றி பதிலளிக்கின்றார்’ என்று கூறியுள்ளார்.

அபிராமி இந்த வீடியோவை இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்த நிலையில் இந்த இரண்டு நாளில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் ’தற்போது அந்த பிரச்சனை முடிந்துவிட்டது, தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

More News

எஸ்பிபி-ஐ பார்க்க மருத்துவமனை விரைந்தார் கமல்ஹாசன்: வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 

பாடகர் எஸ்பிபி மிகவும் கவலைக்கிடம்: இசை ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் 

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி தொடங்கும் தேதி, நேரம் அறிவிப்பு

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

மதுரைக்கார மன உறுதியும் மருத்துவமும் உங்களை மீட்டெடுக்கும்: வைரமுத்து

தேமுதிக தலைவரும் கேப்டன் என்று அன்புடன் ரசிகர்களாலும் தொண்டர்களும் அழைக்கப்படுவருமான விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

விஜயகாந்துக்கு கொரோனா எப்படி வந்தது? பிரேமலதா பேட்டி!

கேப்டன் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருக்கு கொரோனா எப்படி ஏற்பட்டது