close
Choose your channels

எக்ஸாம் எழுதி மெயில் அனுப்பினேன், டெலிட் பண்ணிட்டாங்க: அஜித் பட நடிகையின் புலம்பல்

Friday, September 25, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் அஜித் நடித்த ‘நேர் கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தவருமான அபிராமி தனது இன்ஸ்டாகிராமில் சென்னைப் பல்கலைக்கழகம் மீது புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: நான் எம்.ஏ. டான்ஸ், ஃபைனல் இயர் படித்து வருகிறேன். பல்கலைக்கழகத்தில் எனது தேர்வு குறித்து போன் மூலம் என்ன விவரம் கேட்டாலும் பதில் கிடைப்பதில்லை. மாறாக அவமதிப்பு செய்கிறார்கள்.

கடந்த 2 நாட்களுக்கு முன் தேர்வு நடந்தது. காலை 10 மணிக்கு மெயிலில் வினாத்தாள் வரும் என்றார்கள். ஆனால் 2.30 மணிக்கு வினாத்தாள் வந்தது. நான் என்னுடன் படிக்கும் ஒருவரிடம் இருந்து ஏற்கனவே வினாத்தாள் வாங்கி பதில் எழுதி மெயில் அனுப்பிவிட்டேன். ஆனால் நீங்கள் அனுப்ப வேண்டிய மெயில் இதுதான் என்று ஒரு புதிய மெயில் ஐடியை கொடுத்தார்கள். அப்படியெனில் நான் ஏற்கனவே விடை எழுதிய அனுப்பிய மெயில் என்ன ஆச்சு? என்று கேட்டபோது அதை டெலிட் செய்துவிட்டோம் என்று எளிதாக கூறுகின்றார்கள்.

நான் கஷ்டப்பட்டு படித்து எழுதி மெயில் அனுப்பியதை அவ்வளவு எளிதாக டெலிட் செய்துவிட்டோம் என்று அவர்கள் கூறுவதை எப்படி ஏற்றுக் கொள்வது? இதுகுறித்து விளக்கம் கேட்டால் தேர்வு ஒரு ஃபார்மாலிட்டிதான் எல்லாரையும் பாஸ் ஆக்கிவிடுவோம் என்று ஒருவர் பொறுப்பின்றி பதிலளிக்கின்றார்’ என்று கூறியுள்ளார்.

அபிராமி இந்த வீடியோவை இரண்டு நாட்களுக்கு முன் பதிவு செய்த நிலையில் இந்த இரண்டு நாளில் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை, சற்றுமுன் வெளியிட்ட வீடியோவில் ’தற்போது அந்த பிரச்சனை முடிந்துவிட்டது, தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.