திருச்செந்தூர் முருகன் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததில் பெண் பக்தர் பலி

  • IndiaGlitz, [Thursday,December 14 2017]

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் ஒன்றும், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் வீடுமான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே இருந்த பிரகார மண்டபம் சற்றுமுன்னர் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் பெண் பக்தர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும் இந்த விபத்தின் இடிபாடுகளில் ஒருசிலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

60 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த பிரகாரம் கடற்கரைக்கு எதிரே அமைந்துள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும் தீயணைப்புப்படை மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர் தற்போது திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருப்பதாகவும், இன்று மதியம் 3 மணிக்குள் அவர் கோவிலை சென்றடைவார் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பிரகார மண்டபம் இடிந்து விழுந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் கோவிலுக்குள் மறு அறிவிப்பு வரும் வரை வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.

More News

சூர்யா, விக்ரம் பட்டியலில் இணைந்த சண்முகப்பாண்டியன்

கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்து வரும் 'மதுர வீரன்' படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில்

உடுமலை சங்கர் கொலை வழக்கு திரைப்படத்தின் டைட்டில் அறிவிப்பு

கோலிவுட் திரையுலகில் 'கேப்டன் பிரபாகரன்' முதல் 'தீரன் அதிகாரம் ஒன்று' வரை பல உண்மை சம்பவங்கள் திரைப்படங்களாக உருவாக்கப்பட்டு அவை நல்ல வெற்றியும் பெற்று வருவதை பார்த்து வருகிறோம்

விஜய்யை அடுத்து சூர்யாவுக்கு கிடைத்த பெருமை

'தெறி திரைப்படம் ரிலீஸ் ஆனபோது முதல் நாள் முதல் காட்சி காணும் அனுபவத்தை பெண் ரசிகர்களுக்கும் வழங்கும் வகையில் முதன் முறையாக பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படும் முதல் நாள், முதல் காட்சி திரையிடப்பட்டது.

பலருக்கும் பசியாற்ற உதவியாக கஞ்சா கருப்பு பரிசளித்த ஆட்டோ..!

பிரபல நகைச்சுவை நடிகர் கஞ்சாகருப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் ரசிகர்களின் மனதை கவர்ந்த நிலையில் தற்போது அவரது மனிதாபிமான செயல் ஒன்று வெளிவந்து அவருடைய மதிப்பை உயர்த்தியுள்ளது

ஜெயம் ரவியின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள 'டிக் டிக் டிக்' திரைப்படம் வெகுவிரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் அவர் அடுத்ததாக ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'சங்கமித்ரா' படத்திற்கு விரைவில் தயாராகிறார்.