ஆக்சன்கிங் அர்ஜூன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சி: திரையுலகினர் இரங்கல்!
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
ஆக்சன் கிங் அர்ஜுன் வீட்டில் நிகழ்ந்த துக்க நிகழ்ச்சியை அடுத்து ஒட்டுமொத்த திரையுலகம் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றது.
நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா அவர்கள் இன்று காலமானார். அவருக்கு வயது 85.
கடந்த சில நாட்களாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவரது உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகினர் அர்ஜுனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
மறைந்த தேவம்மா அவர்களின் கணவரும் அர்ஜுனின் தந்தையுமான சக்தி பிரசாத் ஒரு கன்னட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது. சக்தி பிரசாத் - லட்சுமி தேவம்மா தம்பதிக்கு கிஷோர் சார்ஜா, அர்ஜுன் சார்ஜா ஆகிய 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மைசூரில் உள்ள பள்ளி ஒன்றில் லட்சுமி தேவம்மா ஆசிரியராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments