நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன்: போலீசில் வாக்குமூலம் கொடுத்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Thursday,June 02 2022]

நடிகையின் சம்மதத்துடன் தான் உறவு கொண்டேன் என நடிகை அளித்துள்ள பாலியல் புகார் குறித்து போலீசாரிடம் பிரபல நடிகர் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள நடிகை ஒருவர், நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபு தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்த போலீசார், விஜய்பாபு ஆஜராக சம்மன் அனுப்பினர்.

இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் திரும்பிய நடிகர் விஜய் பாபு போலீசார் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அப்போது ’என் மீது புகார் கூறிய நடிகையை எனக்கு முன்பே தெரியும் என்றும், அடிக்கடி அவர் என் வீட்டிற்கு வருவார் என்றும், அவருடைய சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம் என்றும் கூறினார்.

எனது படங்களில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுக்காததால் ஏற்பட்ட ஆத்திரத்தாலும் எனது தொழில் எதிரிகள் தூண்டிவிட்டதாலும் தான் நடிகை புகார் கொடுத்துள்ளார் என்றும் இந்த வழக்கு தொடர்பாக போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்’ என்றும் கூறியுள்ளார்.

மேலும் போலீஸ் விசாரணையின் போது நடிகையுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் அவர் போலீசாருக்கு அளித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு குறித்து மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

More News

திருமணம் தள்ளிப்போக இதுதான் காரணம்: பிரியா பவானி சங்கர்

 நடிகை பிரியா பவானி சங்கர் தனது திருமணம் தள்ளி போனதற்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

பிரசன்னா- ரெஜினாவின் 'ஃபிங்கர்டிப்' வெப்தொடர் 2வது சீசன்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரசன்னா- ரெஜினா கசாண்ட்ரா - அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகியுள்ள ஃபிங்கர்டிப் தொடரின் இரண்டாவது சீசன் ஜூன் 17 முதல் ஜீ5-ல் ஒளிபரப்பாகிறது. 

உலகின் மிக உயர்ந்த கட்டிடத்தில் 'விக்ரம்' டிரைலர்: கமல் வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான முதல் நாளுக்குரிய அனைத்து காட்சிகளுக்கும்

நான் பாவனி ரெட்டி கண்ட்ரோல்ல தான் இருக்கிறேன்: கமல் முன் ஒப்புக்கொண்ட அமீர்!

நான் பாவனி ரெட்டி கண்ட்ரோலில் தான் இருக்கின்றேன் என்று கமல்ஹாசன் முன் அமீர் கூறியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் பரிதாப பலி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.