close
Choose your channels

நான் பாவனி ரெட்டி கண்ட்ரோல்ல தான் இருக்கிறேன்: கமல் முன் ஒப்புக்கொண்ட அமீர்!

Thursday, June 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நான் பாவனி ரெட்டி கண்ட்ரோலில் தான் இருக்கின்றேன் என்று கமல்ஹாசன் முன் அமீர் கூறியிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் அமீர் மற்றும் பவானி ரெட்டி ஆகியோர்களும் உண்டு என்பதும், இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது. அமீர் தனது காதலை வெளிப்படையாக கூறிவிட்ட நிலையில் பாவனி ரெட்டி தனது காதலை வெளிப்படையாக இதுவரை கூறவில்லை.

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இருவரும் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது பிபி ஜோடிகள் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர் - பாவனி ரெட்டி இருவரும் ஜோடியாக நடனம் ஆடுகிறார்கள்.

இந்த நிலையில் வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பாக இருக்கும் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் நடித்து உள்ளார். இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசனின் பாடல்களுக்கு போட்டியாளர்கள் நடனம் ஆடுகின்றனர்.

அந்த வகையில் ’மன்மதன் அம்பு’ படத்தில் இடம்பெற்ற ‘நீ நீல வானம்’ என்ற பாடலுக்கு பாவனி ரெட்டி மற்றும் அமீர் நடனம் ஆடினர். மிக அபாரமாக இருவரும் நடனமாடியதை பார்த்த நடுவர் ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிறப்பு விருந்தினர் கமல்ஹாசன் ஆகியோர் ஆச்சரியமடைந்தனர்.

அப்போது அமீர் கூறியபோது ’இந்த பாடலை பொறுத்தவரைக்கும் நான் நடன இயக்குனரா? அல்லது பாவனி நடன இயக்குனரா? என்பது சந்தேகமாக இருக்கிறது என்றும், முதல் மூன்று நாட்கள் மட்டும் தான் அவர் என் கண்ட்ரோலில் இருக்கிறார் என்றும், அடுத்த மூன்று நாட்கள் நான் அவருடைய கண்ட்ரோலில் இருக்கிறேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.