close
Choose your channels

நான் சோம்பேறி உங்களை பழிவாங்க விரும்பவில்லை: யாரை சொல்கிறார் அஸ்வின்?

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி திரையுலகில் ஹீரோ வாய்ப்பை பெற்றவர் அஸ்வின். இவர் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி சுமாராக ஓடியது.

இந்த படத்தின் ஆடியோ விழாவின்போது 40 கதைகளை கேட்டு தூங்கி விட்டேன் என அஸ்வின் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் நெட்டிசன்கள் அவரை சில நாட்களாக கேலியும் கிண்டலும் செய்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் அஸ்வின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’பழிவாங்குவதா? நான் மிகவும் சோம்பேறி, நான் இங்கேயே உட்கார்ந்து கொள்கிறேன், கர்மா உங்களைத் துன்புறுத்தும்’ என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவை அடுத்து அவர் யாரை பழி வாங்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அஸ்வின் இதற்கு பதில் அளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இந்த நிலையில் ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தை அடுத்து மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க அஸ்வின் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.