பாஜகவில் மேலும் ஒரு பிரபல நடிகர்: ராதாரவி தகவல்

  • IndiaGlitz, [Wednesday,March 04 2020]

கடந்த சில மாதங்களாகவே கோலிவுட் துறையிலுள்ள பிரமுகர்கள் பலர் பாஜகவில் இணைந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில்கூட நடிகை நமீதா மற்றும் நடிகர் ராதாரவி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இந்த நிலையில் பாஜகவில் மேலும் ஒரு முக்கிய நடிகர் இணைய இருப்பதாக ராதாரவி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று பாஜக சார்பில் குடியுரிமை சீர்திருத்த சட்டத்திற்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட ராதாரவி அதன்பின்னர் கூறியபோது, ‘பாஜகவில் சேர்வதற்கு பல நடிகர்கள் தயாராக உள்ளதாகவும் இதுகுறித்து நடிகர் கார்த்திக்கிடம் தான் பேசி உள்ளதாகவும் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்றும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி பாஜகவில் சேர்வதற்கு மேலும் பல நடிகர்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் இணைவது குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறியுள்ளார்.

நடிகர் கார்த்திக் ஏற்கனவே தனிக் கட்சி நடத்தி வரும் நிலையில் அக்கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைவாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More News

ரத்தம் கொட்டிய நிலையிலும் படப்பிடிப்பை தொடர்ந்து அருண் விஜய்: இயக்குனர் ஆச்சர்யம்

கோலிவுட் திரையுலகில் ஒரு சில நடிகர்கள் லேசான காயம் ஏற்பட்டாலே படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்று விடும் நிலையில் படப்பிடிப்பின் போது காயம் ஏற்பட்டு ரத்தம்

கொரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள வீடியோ..!

கொரோனா வைரஸானது உலகிற்கே பெரும் அச்சுறுத்தலாகி வருகிறது. சீனாவில் தொடங்கி இத்தாலி, ஈரான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கொரியா, என இந்தியா வரை இந்த வைரஸின் தாக்கம் உள்ளது.

ரஜினியுடன் கூட்டணி சேர கமலுக்கு நிபந்தனை விதித்த பிரபலம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகிய இருவரும் இணைந்து வரும் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறி வருகின்றன

ஆர்யாவை பார்த்தாலே எனக்கு வலிக்கின்றது: சாயிஷாவின் அதிர்ச்சி டுவீட்

நடிகர் ஆர்யா விரைவில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கவுள்ள சல்பேட்டா என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பதும் பாக்ஸிங் சம்பந்தப்பட்ட இந்த படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடிக்க உள்ளார்

கள்ளக்காதலி கொடுமையால் குழந்தைகளுடன் தற்கொலை: 45 வயது நபரின் அதிர்ச்சி செயல்

மனைவி இறந்து ஆறு மாதமே ஆன ஒருவர் கள்ளக்காதல் வைத்திருந்த நிலையில் அந்த கள்ள காதலியால் தனது குழந்தைகளுக்கு கொடுமை நடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து