நல்லா தான் இருந்தாரு, திடீரென போய்விட்டார்.. மனோபாலா மறைவு குறித்து மகன் உருக்கம்..!

  • IndiaGlitz, [Wednesday,May 03 2023]

தனது தந்தை நல்லபடியாக உடல் நலம் தேறி வந்ததாகவும் திடீரென அவர் மறைந்து விட்டது தங்களை அதிர்ச்சி கொள்ளாக்கி உள்ளதாகவும் மனோபாலாவின் மகன் பேட்டி அளித்துள்ளார்

தமிழ் திரை உலக நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் மனோபாலா இன்று காலமானதை அடுத்து திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் மனோபாலாவின் மகன் இன்று பேட்டி அளித்தபோது, ‘கடந்த சில வாரங்களாகவே அவர் உடல் நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்த போது நன்றாக தேறி தான் வந்து கொண்டிருந்தார்

கடந்த சில நாட்களாக தான் அவரது உடல் திடீரென மோசம் அடைந்து இன்று காலமாகிவிட்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. மேலும் அவருடைய இறுதி சடங்கு நாளை நடத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறினார். மேலும் பத்திரிகையாளர்கள் என்றால் எனது தந்தைக்கு மிகவும் உயிர் என்றும் எனவே எங்களுக்கு நீங்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
 

More News

நடிகர் - இயக்குனர் மனோபாலா காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா திடீரென காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திடீரென 'தங்கலான்' படப்பிடிப்புக்கு செல்லாத விக்ரம்.. அதிர்ச்சி காரணம்..!

சியான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் மீண்டும் தொடங்கிய நிலையில் இந்த படப்பிடிப்பில் விக்ரம் உள்பட படக்குழுவினர் அனைவரும்

விஜய்யின் மகள் ஜனனி, மகனாக நடிப்பது யார் தெரியுமா? 'லியோ' படத்தின் சூப்பர் அப்டேட்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தில் அவரது மகளாக பிக்பாஸ் ஜனனி நடித்து வருவதாக கூறப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தளபதி விஜய்யின் மகனாக நடிக்கும்

முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் இணையும் பிரபலம்.. கமல்ஹாசன் அறிவிப்பு..!

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது

நீங்களே இப்படி செய்யலாமா? 65 வயதில் 16 வயது சிறுமியை திருமணம் செய்துகொண்ட மேயர்!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த நகர மேயர் ஒருவர் 65 வயதில் 16 வயது சிறுமியைத் திருமணம் செய்துகொண்டுள்ளார்.