பிரபல ஹீரோவுடன் விமானத்தில் வந்தவருக்கு கொரோனா: தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Friday,June 05 2020]

தமிழில் மணிரத்னம் இயக்கிய ’ராவணன்’ உள்பட ஒரு சில படங்களிலும் மலையாளத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரித்விராஜ். இவர் தற்போது ’ஆடுஜீவிதம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஜோர்டான் நாட்டில் நடைபெற்ற போது திடீரென கொரோனா வைரஸ் காரணமாக அங்கேயே படக்குழுவினர் இரண்டு மாதங்கள் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது

இதனை அடுத்து சமீபத்தில் கேரள அரசின் முயற்சியால் அனுப்பப்பட்ட சிறப்பு விமானம் மூலம் பிரித்விராஜ் உள்பட படக்குழுவினர் அனைவரும் கொச்சி திரும்பினர். கொச்சியில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரித்விராஜ், அதன் பின்னர் வீட்டுக்கு வந்து ஏழு நாட்கள் தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

இந்த நிலையில் ஜோர்டான் நாட்டில் இருந்து பிரித்விராஜ் உடன் விமானத்தில் வந்த படக்குழுவினர்களில் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு அருகில் விமானத்தில் உட்கார்ந்து இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

’ஆடுஜீவிதம்’ திரைப்படத்தில் பிரித்விராஜூடன் இந்தப் படத்தில் அமலா பால், அபர்ணா பாலமுரளி, வினீத் ஶ்ரீனிவாசன், லக்‌ஷ்மி சர்மா உட்பட பலர் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கின்றார்.

More News

கொரோனாவில் இருந்து குணமாகிய குழந்தைகள்: ராகவா லாரன்ஸ் மகிழ்ச்சி

தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடம்: அதிர்ச்சி தகவல்

கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு புதிய உச்சம்: தமிழகத்தில் எவ்வளவு?

சென்னையில் கடந்த சில நாட்களாக 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றும் 1000க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

ஜுன் மாதத்தில் பூமியை நோக்கி அடுத்தடுத்து வரப்போகும் 3 விண்கற்கள்!!! 2020 இதோடு முடியாது போல...

2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிற்கு அடுக்கடுக்காக பல பேரழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றன.

இசையமைப்பாளராக மாறிய 'ஆளப்போறான் தமிழன்' பாடகர்

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய ’மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆளப்போறான் தமிழன்’