close
Choose your channels

இசையமைப்பாளராக மாறிய 'ஆளப்போறான் தமிழன்' பாடகர்

Thursday, June 4, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லி இயக்கத்தில், இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகிய ’மெர்சல்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ’ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட்டானது என்பது தெரிந்ததே. இந்த பாடலை பாடியவர் பாடகர் சத்யபிரகாஷ்.

’ஆளப்போறான் தமிழன்’ பாடல் மட்டுமின்றி காற்று வெளியிடை படத்தில் இடம்பெற்ற ‘நல்லை அல்லை’ என்ற பாடலையும் ’அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இடம்பெற்ற ’ராசாலி’ என்ற பாடலையும் ’எனை நோக்கி பாயும் தோட்டா’ என்ற படத்தில் இடம்பெற்ற ‘நான் பிழைப்பானா’ என்ற பாடலையும் பாடி தமிழக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சத்யபிரகாஷ் என்றால் அது மிகையாகாது.

இந்த நிலையில் பாடகர் சத்யபிரகாஷ் புதிய ஆல்பம் ஒன்றின் மூலம் இசையமைப்பாளராக அவதாரம் எடுத்துள்ளார். ’வாரேன் ஓடி வாரேன்’ என்று தொடங்கும் இந்த பாடல் இன்று வெளியாகி உள்ளது. இதன் வரிகள் அடங்கிய லிரிக் வீடியோ இன்று மாலை 6 மணிக்கு வெளியாக இருப்பதாகவும் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளர் டி.இமான் வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலை அகமது ஷ்யாம் என்பவர் எழுதியிருந்தார். தன் காதலியை தேடி பயணம் செய்யும் ஒரு காதலனின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ள ’வாரேன் ஓடி வாரேன்’ என்ற பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.