நடிகர்-தயாரிப்பாளர் மாரடைப்பால் மரணம்: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்

  • IndiaGlitz, [Sunday,May 09 2021]

கடந்த சில நாட்களாகவே தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் கொரோனா தொற்று மற்றும் மாரடைப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் காலமாகி வருவது திரையுலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களில் நடிகர் விவேக், இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த் உள்பட முக்கிய திரையுலக பிரபலங்கள் காலமானது திரையுலகினர் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி அடைய செய்துள்ளது

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நடிகர், தயாரிப்பு மேற்பார்வையாளர், தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் என்பவர் காலமானார். அவர் தனது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு சென்ற இடத்தில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து இன்று காலை 11 மணிக்கு காலமானார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. அவரது உடல் மதுரைக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் நாளை அவரது நல்லடக்கம் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது

மறைந்த நடிகர்-தயாரிப்பாளர் அந்தோணி சேவியர் அவர்களுக்கு ஜோஸ்பின் ஜெயா என்ற மனைவியும் அபி, ஜெய்சன் ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நான் மகான் அல்ல, சிறுத்தை, மாஸ், பாண்டியநாடு, ஜீவா, பாயும்புலி, ஈஸ்வரன் போன்ற படங்களுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணிபுரிந்த அந்தோணி சேவியர். சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார் என்பதும் பல படங்களில் சிறு சிறு கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

மகத் வீட்டில் நடந்த விசேஷம்: வைரலாகும் புகைப்படங்கள்

நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மகத், பிரபல மாடல் அழகி பிராய்ச்சி மிஸ்ராவை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்துகொண்டார்

நன்றி அம்மா: யார்க்கர் கிங் நடராஜனின் அன்னையர் தின நெகிழ்ச்சியான பதிவு!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்னையர் தின வாழ்த்துக்களை பலர் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

விஷாலின் அடுத்த படத்தில் முக்கிய நடிகையாகும் டப்பிங் கலைஞர்!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யாவுடன் 'எனிமி' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு

ஊரடங்கின்போது வாகனத்தில் சென்றால் பறிமுதல் செய்யப்படுமா? டிஜிபி திரிபாதி முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் அதிகரித்துவரும் நிலையில் நாளை அதிகாலை 4 மணி முதல் மே 24 ஆம் தேதி 4 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 

அன்னையர் தின போட்டோஷூட்டில் ஷகிலா-மிளா: வேற லெவல் என ரசிகர்கள் பாராட்டு

திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த நடிகை ஷகிலா, 'குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் அனைவரும் அவரை 'அம்மா' என்று கூப்பிடும் அளவிற்கு இமேஜ் உயர்ந்துவிட்டார்.