நாங்குநேரி அவலம்: பா ரஞ்சித், மாரி செல்வராஜை அடுத்து தமிழ் நடிகரின் ஆதங்கம்..!

  • IndiaGlitz, [Sunday,August 13 2023]

நாங்குநேரியில் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் குறித்து இயக்குனர்கள் பா. ரஞ்சித், மாரி செல்வராஜ் மற்றும் மோகன் ஜி ஆகியோர் தங்களது சமூக வலைதளங்களில் கண்டனங்களை தெரிவித்திருந்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது நடிகர் ராஜ்கிரன் தனது சமூக வலைத்தளத்தில் நாங்குநேரி அவலம் என்று தனது ஆதங்கமான பதிவை தெரிவித்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

நான் பள்ளியில் படித்த காலங்களில்,
இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களை சார்ந்த மாணவர்களும்,பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர்,
நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று
எல்லா சாதிகளைச் சார்ந்த மாணவர்களும்
ஒன்றாகத்தான் படித்தோம்.
யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை.
ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக,
ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம்.
எங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியர்களும்
எல்லா சாதி மதமும் கலந்து தான்
இருந்தார்கள். அவர்கள் அனைவரும்
எவ்வித பேதமும் பார்க்காமல்,
எல்லா மாணவர்களையும் தங்களின்
சொந்தப் பிள்ளைகள் போல், அன்புடனும்
அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள்.
இன்று,மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது.
இப்படியான சூழல் எப்படி உருவானது ?
அந்தக்காலம் போல் இந்தக்காலமும்
மாறி விடாதா இறைவா என்று,
ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது...
#நாங்குநேரி அவலம்...

More News

ரஜினி வீட்டுக்கு கதை சொல்ல லேட்டாக போனதற்கு காரணம் இவர்தான்: நெல்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல ரிசல்ட் பெற்று உள்ள நிலையில் இந்த படத்தின்  இசை வெளியீட்டு விழாவில் ரஜினி பேசிய போது 'நெல்சன் கதை சொல்ல

தனி திரைப்படமாகிறதா 'ரோலக்ஸ்'? ரசிகர்களிடம் சூர்யா பகிர்ந்த மாஸ் தகவல்..!

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய  'விக்ரம்' திரைப்படத்தில் கடைசி சில நிமிடங்கள் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் மிரட்டி இருப்பார் என்பதும் இந்த கேரக்டர் 'விக்ரம்'

 'கருமேகங்கள் கலைகின்றன' ரிலீஸ் தேதி அறிவிப்பு.. இதே தேதியில் ரிலீஸாகும் சந்தானம் படம்..!

தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான 'கருமேகங்கள் கலைகின்றன' என்ற படத்தின் சென்சார் சான்றிதழ் நேற்று வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.

நடிகை மீனா இவ்வளவு சூப்பரா பாடுவாரா? அதுவும் சித்ராவுக்கு இணையாக.. வைரல் வீடியோ..

நடிகை மீனா மிகச் சிறந்த நடிகை என்பதை அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் சிறப்பான பாடகி என்பது இப்போதுதான் வீடியோ ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

என்னுடன் நடிக்க பயந்தார்.. வெறும் வாய்ப்பேச்சு மட்டும் தான்: சித்தார்த் குறித்து எஸ்.வி.சேகர்..!

என்னுடன் நடிக்க சித்தார்த் பயந்தார் என்றும், அவர் வெறும் வாய் பேச்சு தான் என்றும் உதயநிதிக்கு இருந்த தைரியம் கூட சித்தார்த்துக்கு இல்லை என்றும் நடிகர் எஸ்வி சேகர் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை