ரஜினியுடன் நடிக்க ஹீரோவாக நடிக்க வாங்கின அட்வான்ஸை திருப்பி கொடுத்துட்டேன்: சொன்னது யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Wednesday,January 17 2024]

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு படத்தில் ஹீரோவாக நடித்த வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான ’காணும் காணும் கொள்ளை அடித்தால்’ என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தவர் ரக்சன். விஜய் டிவி பிரபலமான இவர் முதல் படத்திலேயே அசத்தியதை அடுத்து தற்போது அவர் ஹீரோவாக ’மறக்குமா நெஞ்சம்’ என்ற நடித்து முடித்து உள்ளார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் பூஜை விழாவில் ரக்சன் இருந்ததை அடுத்து அவர் அந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து கூறியுள்ளார். லைக்காவிடமிருந்து தன்னிடம் ‘வேட்டையன்’ படத்தில் நடிக்க அணுகியதாகவும் தலைவர் படம் என்றதும் உடனே தான் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்திற்காக ஏற்கனவே இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாங்கி இந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என்றும் தலைவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் அடுத்த படமாக ‘சிம்பு 48’ படத்திலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் உதவி இயக்குனராகவாவது அந்த குழுவுடன் நான் இணைந்து கொள்வேன் என்றும் அவர் கூறினார்.

More News

பிரபல நடிகரின் அடுத்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் கமல்ஹாசன்? மாஸ் தகவல்..!

உலகநாயகன் கமல்ஹாசன் தமிழ் திரை உலகில் பிஸியான நடிகர்களில் ஒருவர் என்பதும் அவர் 'இந்தியன் 2' என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு 'இந்தியன் 3' 'தக்லைஃப்', 'கல்கி 2898 ஏடி' மற்றும்

மதுக்கடையில் மது வாங்க வந்தவர்களை அடித்து விரட்டிய விஷால்.. பரபரப்பு வீடியோ..!

மது கடைகளில் மது வாங்க வந்த மதுப்பிரியர்களை நடிகர் விஷால் அடித்து விரட்டிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

GOAT படத்தில் பிரபுதேவா, பிரசாந்த் கேரக்டர் இதுவா? கசிந்த ரகசியம்..!

தளபதி விஜய் நடித்து வரும் 'கோட்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் விஜய், தந்தை - மகன் என இரண்டு கேரக்டர்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது

'குண்டூர் காரம்' படத்தில் பீடி குடிக்கும் காட்சி.. மகேஷ் பாபு கொடுத்த விளக்கம்..!

நடிகர் மகேஷ்பாபு நடித்த 'குண்டூர் காரம்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் அதேபோல் வசூலிலும் சாதனை செய்து வருகிறது

பிக்பாஸ் முடிந்ததும் குருநாதரை சந்தித்த ரன்னர் அப் மணி.. வைரல் புகைப்படம்..!

விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிறு அன்று முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அர்ச்சனா மற்றும் ரன்னர் ஆப் வின்னராக மணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்