close
Choose your channels

ரஜினியுடன் நடிக்க ஹீரோவாக நடிக்க வாங்கின அட்வான்ஸை திருப்பி கொடுத்துட்டேன்: சொன்னது யார் தெரியுமா?

Wednesday, January 17, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு படத்தில் ஹீரோவாக நடித்த வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என வளர்ந்து வரும் நடிகர் ஒருவர் கூறி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவான ’காணும் காணும் கொள்ளை அடித்தால்’ என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானுடன் நடித்தவர் ரக்சன். விஜய் டிவி பிரபலமான இவர் முதல் படத்திலேயே அசத்தியதை அடுத்து தற்போது அவர் ஹீரோவாக ’மறக்குமா நெஞ்சம்’ என்ற நடித்து முடித்து உள்ளார். இதனையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தின் பூஜை விழாவில் ரக்சன் இருந்ததை அடுத்து அவர் அந்த படத்தில் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து கூறியுள்ளார். லைக்காவிடமிருந்து தன்னிடம் ‘வேட்டையன்’ படத்தில் நடிக்க அணுகியதாகவும் தலைவர் படம் என்றதும் உடனே தான் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த படத்திற்காக ஏற்கனவே இரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க வாங்கி இந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து விட்டேன் என்றும் தலைவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முடிவு எடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் அடுத்த படமாக ‘சிம்பு 48’ படத்திலும் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புவதாகவும், வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் உதவி இயக்குனராகவாவது அந்த குழுவுடன் நான் இணைந்து கொள்வேன் என்றும் அவர் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.