close
Choose your channels

பிறந்த நாளில் சாந்தனுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பாக்யராஜ்!

Saturday, August 28, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது கூட விடுமுறை எடுக்காமல் நடித்துக் கொண்டிருந்த நடிகர் சாந்தனுவுக்கு அவரது தந்தை கே பாக்யராஜ் இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்துள்ளது.

நடிகர் சாந்தனு தற்போது ’இராவண கோட்டம்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். தயாரிப்பளர் கண்ணன் ரவி தயாரிக்கும் இந்த படத்தை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் மீண்டும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமநாதபுரத்தில் நடைபெற்று வருகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் சாந்தனு தனது பிறந்தநாள் அன்று கூட விடுமுறை எடுத்துக் கொள்ளாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது மகனின் ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அவரது தந்தை கே.பாக்யராஜ் அருகில் இருந்து வாழ்த்து தெரிவிக்கும் நிலையில் இந்த ஆண்டு அவர் ராமநாதபுரத்தில் படப்பிடிப்பில் இருப்பதால் ராமநாதபுரத்திற்கு நேரடியாக பாக்யராஜ் சென்று தனது மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சாந்தனு மகிழ்ச்சியுடன் தனது தந்தையுடன் இணைந்து கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். கே பாக்யராஜ் அவர்களின் வருகை ‘இராவண கூட்டம்’ படத்தின் ஒட்டுமொத்த குழுவினர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாந்தனு முக்கிய கேரக்டரில் நடிக்கும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.