முதல்முறையாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சதீஷ்! இணையத்தில் வைரல்!

  • IndiaGlitz, [Sunday,December 13 2020]

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான சதீஷ்க்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்தது என்பதும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர்கள் தங்களது முதலாம் ஆண்டு திருமண நாளை கொண்டாடினர் என்பதும் தெரிந்ததே.

மேலும் கடந்த மாதம் 4அம் தேதி சதீஷ்க்கு பெண் குழந்தை பிறந்தது. இதனை அவர் தனது டுவிட்டரில் தெரிவித்து இருந்தபோது ஒட்டுமொத்த திரையுலகினர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சதீஷ் குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து தற்போது முதல்முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சதீஷின் விரலை அவரது குழந்தை கையால் பிடித்திருப்பது போன்ற உள்ள இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

’அப்ப-மகள்’ என இந்த டுவிட்டுக்கு சதீஷ் கேப்ஷனாக பதிவு செய்திருக்கும் நிலையில் இந்த டுவிட்டுக்கு ‘ஒரு தந்தைக்கு, தன் மகளின் மழலை கைகளால் தன் விரல்பிடிக்கும் மகளை காணும் போது.. மகிழ்ச்சி உட்சம் தொடும்.. அந்த மகிழ்வை உணர்ந்து அனுபவித்து எங்களுடன் பகிர்ந்த சதீஷுக்கு வாழ்த்துக்கள்’ என்பது உள்பட பல சுவாரஸ்யமான கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.

More News

சந்தானம் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு: ஃபர்ஸ்ட் சிங்கில் விரைவில்!

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த நடிகர் சந்தானம் கடந்த 5 ஆண்டுகளாக ஹீரோவாக மட்டுமே நடித்து வருகிறார் என்பதும் அவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு' 'சக்க போடு போடு ராஜா' '

பிரதமர் மோடிக்கு டேக் செய்துவிட்டால் போச்சு: கமல்ஹாசன் பதில்!

பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டு வைத்து கமல்ஹாசன் பதிவுசெய்த டுவிட்டில் பிரதமர் டுவிட்டர் அக்கவுண்ட்டை டேக் செய்யாதது ஏன் என்று செய்தியாளர்கள் கேட்டபோது பிரதமருக்கு டேக் செய்துவிட்டால்

'அண்ணாத்த' படப்பிடிப்பு: சன்பிக்சர்ஸ் வெயிட்ட அட்டகாசமான புகைப்படங்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கும் என ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது.

'தி டர்ட்டி பிக்சர்ஸ்' நடிகையின் மர்ம மரணத்தில் திடீர் திருப்பம்: போஸ்ட்மார்ட்டம் அறிக்கை சொல்வது என்ன? 

பிரபல பாலிவுட் மற்றும் வங்காள மொழி நடிகை ஆர்யா பானர்ஜி திடீரென மர்மமான முறையில் தனது வீட்டில் இறந்து கிடந்தார். இவரது மரணம் கொலையா? அல்லது தற்கொலையா?

கடற்கரைக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாப பலி! சென்னையில் பரபரப்பு!

கோவளம் கடற்கரைக்கு ஜாலியாக சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாபமாக பலியான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது