close
Choose your channels

கடற்கரைக்கு சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாப பலி! சென்னையில் பரபரப்பு!

Sunday, December 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவளம் கடற்கரைக்கு ஜாலியாக சென்ற கள்ளக்காதல் ஜோடி பரிதாபமாக பலியான சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த வசந்தகுமார் என்பவருக்கு திருமணமாகி மனைவி குழந்தையுடன் பெங்களூரில் வசித்து வருகிறார். இவர் வேலை பார்க்கும் கம்பெனியில் வேலூரைச் சேர்ந்த துர்க்காதேவி என்பவரும் வேலை பார்த்து வந்தார். துர்க்காதேவிக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே கம்பெனியில் வேலை செய்து வருவதால் மட்டுமன்றி காஞ்சிபுரம், வேலூர் என அடுத்தடுத்த மாவட்டங்களை சேர்ந்வர்கள் என்பதால் இருவரும் சகஜமாக பழகி உள்ளனர். இந்த நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரான வேலூருக்கு செல்ல வேண்டும் என்றும் அதனால் தனக்கு துணையாக வருமாறு வசந்தகுமாரை அழைத்துள்ளார் துர்க்கா தேவி. இதனையடுத்து இருவரும் மோட்டார் சைக்கிளில் பெங்களூரில் இருந்து வேலூர் சென்றனர். அப்போது வழியில் கோவளம் கடற்கரைக்கு செல்ல அவர்கள் முடிவு செய்து செய்ததக தெரிகிறது. இந்த நிலையில் கோவளம் கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோட்டா சைக்கிள் மோதியது. இதனால் இருவரும் சாலையில் விழுந்ததாகவும் அப்போது, பின்னால் லாரி ஒன்று அவர்கள் இருவர் மீதும் ஏறியதால் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர் என்றும் தெரிகிறது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து செய்த லாரியின் டிரைவர் தப்பி ஓடி விட்டதாகவும் அவரை போலீசார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

ஜாலியாக கடற்கரைக்கு செல்லலாம் என இரு சக்கர வாகனத்தில் சென்ற கள்ளக்காதல் ஜோடி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.