close
Choose your channels

முதலமைச்சராக பழனிச்சாமியை ஏற்றுக் கொள்கிறோம். ஆனால்..: நடிகர் செந்தில்

Tuesday, August 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலமைச்சர் பதவியில் இருந்து எடப்பாடி பழனிச்சாமியையும், துணை முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தையும் அகற்ற வேண்டும் என்று தினகரன் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக எம்.எல்.ஏக்களை இழுக்கும் படலமும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் தினகரன் அணியின் ஆதரவாளரும் சமீபத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளராக நியமனம் செய்யப்பட்டவருமான பழம்பெரும் நகைச்சுவை நடிகர் செந்தில் இன்று தினகரனை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்க்கு பேட்டியளித்தபோது, 'முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்று கொள்கிறோம். ஆனால் அதற்கு முன்னர் அவர் தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும்' என்று கூறியுள்ளார்.

மேலும் அதிமுகவைச் சேர்ந்த அனைவருக்கும் நாவடக்கம் வேண்டும் என்று கூறிவிட்டு அதிமுக எம்பி ப.குமாரை அவர் ஒருமையில் பேசினார். இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது அப்படித்தான் பேசுவேன் என்று கூறி பேட்டியை முடித்து கொண்டு சென்றுவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.