வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவரின் 4 பெண் குழந்தைகளை தத்தெடுத்த பிரபல நடிகர்!

  • IndiaGlitz, [Monday,February 22 2021]

சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் காரணமாக மிகப்பெரிய உயிர்ச்சேதம் ஏற்பட்டது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த எலக்ட்ரீஷியன் ஒருவரின் 4 பெண் குழந்தைகளை பிரபல நடிகர் ஒருவர் தத்தெடுத்துள்ளார்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் இருந்த போது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏராளமான உதவி செய்தவர் நடிகர் சோனு சூட் என்பது தெரிந்ததே. அதுமட்டுமின்றி கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கும், ஏழ்மையில் இருந்த பலருக்கும் அவர் உதவி செய்தார் என்பதும், தெலுங்கானா மாநிலத்தில் அவருக்கு பொதுமக்கள் கோயில் கட்டி வழிபட்டு வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அவருடைய சமூக சேவை தற்போது மேலும் தொடர்ந்து வருகிறது. சமீபத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த எலக்ட்ரீசியன் ஆலம்சிங் என்பவரின் 4 பெண் குழந்தைகளையும் நடிகர் சோனு சூட் தத்தெடுத்துள்ளார். அந்த நான்கு பெண் குழந்தைகளின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகள் அனைத்தையும் அவர் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நான்கு பெண் குழந்தைகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று அந்த பகுதியில் உள்ளவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 

More News

'த்ரிஷ்யம்' மூன்றாம் பாகம் உருவாகிறதா? தயாரிப்பாளர் விளக்கம்!

மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கிய 'த்ரிஷ்யம்' திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே

திருமணத்தை முன்னிட்டு தோழிகளுக்கு பேச்சிலர் பார்ட்டி கொடுத்த ஹிட் பட நடிகை!

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படத்தில் நடித்த நடிகைக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதை அடுத்து அவர் தோழிகளுக்கும் சகோதரிகளுக்கும் பேச்சிலர் பார்ட்டி

ப்ரியா அட்லியும் பேபியும்: வைரலாகும் புகைப்படம்!

ராஜா ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் அட்லி என்பது தெரிந்ததே. இவருடைய மனைவி பிரியா அட்லி ஒரு நடிகை என்பது குறிப்பிடத்தக்கது.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி கவிழ்ந்தது!

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அமைச்சரவையில் இருந்த சில அமைச்சர்கள் தொடர்ந்து ராஜினாமா செய்து வந்தனர்.

செல்போன் சிக்னலுக்காக ராட்டினத்தில் ஏறிய அமைச்சர்… சுவாரசியத் தகவல்!

வம்சம் திரைப்படத்தில் கதாநாயகன் அருள்நிதி முதற்கொண்டு அனைவரும் செல்போன் சிக்னலுக்காக மரத்தில் ஏறி நின்று பேசும் காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.