படக்குழுவினர்களுக்கு பஜ்ஜி சுட்டு கொடுத்த பிரபல நடிகர்: வைரலாகும் வீடியோ

  • IndiaGlitz, [Monday,February 10 2020]

நடிகர் அஜித் தான் நடித்து வரும் படத்தின் குழுவினர்களுக்கு பிரியாணி செய்து கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது பிரபல காமெடி நடிகர் ஒருவர் படக்குழுவினர்களுக்கு பஜ்ஜி சுட்டு கொடுத்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

சசிகுமார் மற்றும் கார்த்திக்கா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் காமெடி நடிகர் சூரி ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு ஒருபக்கம் பரபரப்பான நடைபெற்று வந்த நிலையில் நிலையில் படப்பிடிப்பின் இடையில் படக்குழுவுக்கு நடிகர் சூரி சுடச் சுட பஜ்ஜி தயார் செய்து கொடுத்தார். இதுகுறித்த வீடியோவை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்த பதிவில் அவர், ‘நீங்க ஷூட்டுக்கு கூப்பிடுங்க, இல்ல கூப்டாம போங்க ,நம்மளுக்கு பஜ்ஜி போட்டே ஆகணும்’ என்று அவர் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

'நெய்வேலிக்கு நன்றி': விஜய் வெளியிட்ட செல்பி புகைப்படம்

நேற்று நெய்வேலியில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரசிகர்களை நோக்கி கையசைத்ததோடு அதன் பின்னர் வேனில் ஏறி ரசிகர்களுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டார்.

நான் ஒரு விஜய் ரசிகை: துணிச்சலுடன் கூறிய ரஜினி தனுஷ்-சிம்பு பட நடிகை

பிரபல நடிகைகள் மற்றும் வளர்ந்து வரும் நடிகைகளிடம் நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டால் ஒரு குறிப்பிட்ட நடிகரை சொல்லாமல் நழுவி விடுவார்கள் என்பதுதான் என்பது தெரிந்ததே

அமெரிக்காவை காப்பாற்ற ஒரே வழி டிரம்ப் பதவி விலகுவதே..!மலேசிய பிரதமர் மகாதீர்.

அமெரிக்க மக்கள் குறித்து நான் ஏதும் சொல்லவில்லை. அமெரிக்க குடிமக்கள் மிகவும் நல்லவர்கள். ஆனால் அதிபர் டிரம்ப் அப்படியல்ல.

கொரோனோ வைரஸிலிருந்து சீனாவை காக்க இந்தியா தயாராக இருக்கிறது..! பிரதமர் மோடி.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க இந்தியா உதவத் தயார் என, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு: பிரபல நடிகர் அறிவிப்பு

கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு அளிப்பேன் என்று பிரபல நடிகர் ஒருவர் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.