close
Choose your channels

'நெய்வேலிக்கு நன்றி': விஜய் வெளியிட்ட செல்பி புகைப்படம்

Monday, February 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நெய்வேலியில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ரசிகர்களை நோக்கி கையசைத்ததோடு அதன் பின்னர் வேனில் ஏறி ரசிகர்களுடன் இணைந்து ஒரு செல்பி எடுத்துக்கொண்டார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வந்த நிலையில் இந்த செல்பி புகைப்படத்தை விஜய் எப்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிடுவார் என விஜய் ரசிஅக்ர்கள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் விஜய் அந்த செல்பி புகைப்படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் ‘நெய்வேலிக்கு நன்றி’ என்றும் விஜய் குறிப்பிட்டுள்ளார். இந்த அட்டகாசமான புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு டிரெண்டிங்கிலும் உள்ளது.

விஜய் செல்பி எடுத்ததே இவ்வளவு பெரிய செய்தி ஆகியிருக்கும் நிலையில் அந்த செல்பியை விஜய் தனது டுவிட்டரில் பதிவு செய்தால் அதை அவருடைய ரசிகர்கள் சும்மா விடுவார்களா/ லைக்ஸ்கள் மற்றும் ரீடுவீட் செய்து தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.