கொரோனா லாக்டவுன்: வருமானம் இல்லாததால் மீன் வியாபாரியான நடிகர்

  • IndiaGlitz, [Friday,July 03 2020]

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக படப்பிடிப்பு முடங்கியிருப்பதால் பெரிய நடிகர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என்றாலும் சிறிய நடிகர்கள் மற்றும் அன்றாடம் வருமானம் பெற்ற திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.

100 நாட்களுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல நடிகர் நடிகைகள் வருமானம் இன்றி வேறு தொழிலுக்குச் சென்று விட்டனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்களில் நடித்த நடிகர் சுஜித் அஞ்சேரி தற்போது மீன் வியாபாரி ஆக மாறியுள்ளார்

சினிமாவில் சேர்வதற்கு முன்னர் மீன் சந்தையில் வேலை பார்த்ததாகவும், அந்த அனுபவத்தை வைத்து தற்போது மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், ஊரடங்கால் சினிமாவில் வருமானத்தை இழந்ததால் வேறு வழியில்லாமல் மீண்டும் பழைய வேலைக்கு வந்து விட்டதாகவும் படப்பிடிப்புகள் தொடங்கும்வரை மீன் வியாபாரம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே பாலிவுட் நடிகர் சோலங்கி திவாகர் என்பவர் டெல்லியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார் என்பதும் தமிழ் இயக்குனர் ஆனந்த் என்பவர் சென்னை முகலிவாக்கத்தில் மளிகை கடை வைத்துள்ளார் என்பதும் நடிகர் ரோஹன் பட்னேகர் என்பவர் கருவாடு விற்பனை செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

சிறுமி கொலையாளிக்கு தூக்கு தண்டனை: புதுக்கோட்டை எஸ்பி ஆவேசம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ராஜா என்பவர் பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து கண்மாயில் உள்ள புதரில் வீசி சென்ற

300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளியை அடித்தே கொன்ற மருத்துவமனை ஊழியர்கள்

உபி மாநில மருத்துவமனை ஒன்றின் ஊழியர்கள் 300 ரூபாய் கட்டணம் கட்டவில்லை என்பதற்காக நோயாளி ஒருவரை அடித்தே கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

இதுவரை மின்கட்டணமே கட்டாதவருக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம்: கரூர் கூலித்தொழிலாளி அதிர்ச்சி

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கடந்த சில மாதங்களாக மின்சார ரீடிங் எடுக்க மின் வாரிய ஊழியர்கள் வரவில்லை. ஆனால் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வு காரணமாக மீண்டும் மின்சார ரீடிங் எடுக்கப்பட்டு

தமிழகத்தில் முதல்முறையாக ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா: 16 நாட்களில் மட்டும் 50 ஆயிரம்

தமிழகத்தில் நேற்று முதல்முறையாக 4000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு இருந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாகவும் 4000ஐ தாண்டியுள்ளது என்பதும் தமிழகத்தின் மொத்த பாதிப்பு

கொரோனா விஷயத்தில் மகிழ்ச்சி செய்தி: சுதந்திரத் தினத்தன்று விடிவு வரும்!!! ICMR அறிவிப்பு!!!

உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.