close
Choose your channels

குதிரை சவாரி பயிற்சி பெற்று வரும் நடிகர் சூர்யா.. காரணம் இதுதான்..!

Saturday, April 6, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யாவின் 44வது திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்திற்காக அவர் குதிரை சவாரி பயிற்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் ‘சூர்யா 44’ திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்திற்காக குதிரை சவாரி பயிற்சி சூர்யா மேற்கொண்டு வருவதால் இந்த படத்தில் குதிரை காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இது ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் சஸ்பென்ஸ் மற்றும் திகில் படம் என்றும் கூறப்பட்ட நிலையில் குதிரை இந்த படத்தின் திரைக்கதையில் எப்படி வருகிறது என்பதை புரியாத புதிராக உள்ளது. இதை வைத்து பார்க்கும் போது கார்த்திக் சுப்புராஜ் ஏதோ பெரிய அளவில் இந்த படத்தின் மூலம் சூர்யாவை வைத்து சம்பவம் செய்யப் போகிறார் என்பது மட்டும் தெரிய வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்க மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.