close
Choose your channels

அமைச்சர் உதயநிதியை சந்தித்த அடுத்த காமெடி நடிகர்.. எத்தனை லட்சம் நிவாரண நிதி?

Friday, December 15, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னையில் ஏற்பட்ட கனமழை மற்றும் பெரு வெள்ளத்தின் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்கள் தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர். மேலும் தமிழக அரசும் பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி தர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் திரையுலக பிரபலங்கள் பலர் முதலமைச்சரின் நிவாரண நிதிக்காக அமைச்சர் உதயநிதியை சந்தித்து நிதி கொடுத்து வருகின்றனர் என்பதை பார்த்தோம். சூர்யா - கார்த்தி 10 லட்சம், சிவகார்த்திகேயன் 10 லட்சம், விஷ்ணு விஷால் 10 லட்சம், சூரி 10 லட்சமும் கொடுத்த நிலையில் தற்போது காமெடி நடிகர் வடிவேலு தனது பங்காக 6 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் அமைச்சர் உதயநிதி தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கூறியிருப்பதாவது: மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில், அரசின் மீட்பு - நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், 'முதலமைச்சரின் பொது நிவாரண நிதி'-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.