பதவியேற்றவுடன் நடிகர் வாகை சந்திரசேகரின் முதல் அதிரடி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,August 16 2021]

நடிகர் வாகை சந்திரசேகர் அவர்களுக்கு சமீபத்தில் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவி அளிக்கப்பட்டது என்பதும் இதனை அடுத்து மரியாதை நிமித்தமாக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை வாகை சந்திரசேகர் சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று காலை நடிகர் வாகை சந்திரசேகர் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராக அதிகார பூர்வமாக பொறுப்பேற்றார். இதனை அடுத்து அவருக்கு திரையுலகினர் மற்றும் அரசியல்வாதிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது,

இந்த நிலையில் தமிழகத்தின் இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியை ஏற்ற நடிகர் சந்திரசேகர் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் இருக்கிறார்கள் என்றும் ஆனால் கடந்த 10 ஆண்டில் அரசின் கணக்கெடுப்பில் 40 ஆயிரம் நாட்டுப்புறக் கலைஞர்கள் மட்டுமே உள்ளதாக விபரங்கள் உள்ளது என்றும் இதனை திருத்தி மீதமுள்ள அனைவருக்கும் அரசு சலுகைகள் கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்படும் என்றும் வாகை சந்திரசேகர் கூறியுள்ளார்.

இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவர் பதவியேற்ற உடனே அவர் அறிவித்த இந்த முதல் அறிவிப்பு அனைத்து நாட்டுப்புற கலைஞர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

குரைக்கிற நாய் குரைச்சிகிட்டே தான் இருக்கும்: பென்னி தயால் முடிவுக்கு சூப்பர் சிங்கர் போட்டியாளர் கமெண்ட்!

குரைக்கும் நாய்களை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்கள் குரைத்துக் கொண்டே தான் இருப்பார்கள் என்றும் அது மட்டும் தான் அவர்கள் செய்யக் கூடிய வேலை என்றும் பென்னி தயால் முடிவுக்கு

காயத்தில் அடிக்கப்பட்ட ஸ்டேப்ளர்கள்: யாஷிகா வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ!

யாஷிகாவின் காயத்தில் ஸ்டேப்ளர் அடிக்கப்பட்டு உள்ள வீடியோவை அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்து அதற்கு விளக்கம் கொடுத்த தமிழ் நடிகர்!

மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்து, அதற்கு விளக்கம் கொடுத்த தமிழ் நடிகர் ஒருவரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 

ஆப்கனில் துப்பாக்கிச்சூடு, அதிகரிக்கும் பதற்றம்… இந்தியர்களின் நிலை என்ன?

ஆப்கானிஸ்தான் நாட்டில் போர் முடிவுக்கு வந்துவிட்டதாக தாலிபான்கள் அறிவித்து உள்ளனர்.

தமன்னாவின் அடுத்த படத்தில் இந்த நடிகையின் கணவர் தான் ஹீரோ!

தமன்னா நடிக்க உள்ள அடுத்த படத்தில் பிரபல நடிகையாக இருந்தவரின் கணவர் ஹீரோவாக நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன