close
Choose your channels

மணமக்களுக்கு பெட்ரோல் பரிசளித்து அதற்கு விளக்கம் கொடுத்த தமிழ் நடிகர்!

Monday, August 16, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்து, அதற்கு விளக்கம் கொடுத்த தமிழ் நடிகர் ஒருவரின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 100ஐ தாண்டி விட்டது என்பதும் டீசல் விலை ரூபாய் 100ஐ நெருங்கியுள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தமிழக பட்ஜெட்டில் பெட்ரோல் விலைக்கான வரியை தமிழக அரசு ரூபாய் மூன்று குறைத்ததை அடுத்து தற்போது சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 100 ரூபாய்க்குள் பெட்ரோல் விலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தமிழக அரசு பெட்ரோல் விலையை குறைத்தபோதிலும் மத்திய அரசு இதனை கண்டு கொள்வதில்லை. தமிழக அரசு போல் மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் நடந்த திருமணம் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி மணமக்களுக்கு பெட்ரோல் கேனை பரிசாக அளித்தார். மத்திய அரசு பெட்ரோல் விலை குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே தான் பெட்ரோலை பரிசு அளிப்பதாக கூறினார். தமிழக அரசு பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைத்தை தான் வரவேற்பதாகவும் அதேபோல் மத்திய அரசும் தங்கள் பங்குக்கு குறைக்க வேண்டும் என்றும் ஆனால் மத்திய அரசு இதை கண்டு கொள்ளாமல் இருப்பதை சுட்டிக் காட்டவே மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.