விஜய்யால் எம்ஜிஆர் இடத்தை நிரப்ப முடியுமா? அமைச்சர் ஜெயகுமார் பதில்
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
தளபதி விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் அதுகுறித்து அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் வழக்கறிஞர்களிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் ஒரு பக்கம் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன
இன்னொரு பக்கம் எம்ஜிஆரை போலவே விஜய்யை உருவகப்படுத்தி அவரது ரசிகர்கள் மதுரை உள்பட ஒரு சில நகரங்களில் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். எம்ஜிஆர் நடித்த இதயகனி, ரிக்சாக்காரன், உரிமைக்குரல் உள்ளிட்ட போஸ்டர்களை போலவே விஜய்யின் போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த போஸ்டர்களால் எம்ஜிஆரின் இடத்தை விஜய் நிரப்பி விடுவாரோ என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது
இந்த நிலையில் நடிகர் விஜய்யின் போஸ்டர் குறித்து அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பிய போது அவர் இதுகுறித்து கூறியதாவது: நடிகர் விஜய்யால் எம்ஜிஆரின் இடத்தை நிரப்ப முடியாது. எல்லோரும் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் மாறிவிட முடியாது என்று பதிலளித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரின் இந்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments