விமான நிலையங்களுக்கு விவேக் வைத்த 'தமிழ்' வேண்டுகோள்

  • IndiaGlitz, [Sunday,August 13 2017]

தமிழகத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்களில் ஒலிபரப்பப்படும் அறிவிப்புகள் தமிழிலும் இருக்கும் நிலையில் விமான நிலையத்தில் மட்டும் தமிழ் அறிவிப்புகள் இல்லை என்ற குறை பல வருடங்களாக விமான பயணிகளுக்கு இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியும் கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

இந்த ஆதங்கத்தை தற்போது நடிகர் விவேக் அவர்களும் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'இண்டிகோ கோவை சென்னை விமானத்தில் உழைப்பால் உயர்ந்த வணிக மக்கள் பயணம் செய்கின்றனர். அறிவிப்புகள் தமிழில் இருப்பின் நலம் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இன்னொரு பதிவில், 'தமிழ்நாட்டுக்குள் அத்தனை விமானசேவையிலும், தமிழிலும் அறிவிப்பு இருத்தல் நலம். தமிழ் அறிவிப்பு இருந்தால் இந்தி மற்றும் ஆங்கிலம் புரியாத பயணிகளுக்கு வசதியாக இருக்கும்' என்று அவர் கூறியுள்ளார்.

விவேக்கின் இந்த சமூக வலைத்தள பதிவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தொடர்ந்து அனைவரும் இதுகுறித்து வலியுறுத்தி வந்தால் விமான நிலையத்திலும் விரைவில் தமிழ் ஒலிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கட்டிப்பிடி வைத்தியத்தை கமலுக்கு செய்து காட்டிய நடிகர் சதீஷ்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை இனிமேல் சனி, ஞாயிறு மட்டும் பார்த்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது...

வாக்களித்த மக்களை முட்டாளாக்கி காயத்ரியை காப்பாற்றியது ஏன்? ஸ்ரீப்ரியா அதிரடி கேள்வி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசாவை தவிர மற்ற ஏழு பேர்களும் கடந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்தனர்...

63 குழந்தைகள் மரணம் எதிரொலி: ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனம் மீது எப்.ஐ.ஆர் பதிவு

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் இல்லாததால் கடந்த ஒரு வாரத்தில் 63 குழந்தைகள் பலியான விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது...

விஜய்சேதுபதி படத்தில் இருந்து திடீரென விலகிய பி.சி.ஸ்ரீராம்

'ஆரண்ய காண்டம்' இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் அடுத்த படமான விஜய்சேதுபதியின் 'அநீதி கதைகள்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது...

பரணி, ஓவியாவின் நிலைக்கு தள்ளப்பட்ட காயத்ரி

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் நபர் யார் என்பதை இன்று அல்லது நாளை கமல்ஹாசன் அறிவிப்பார் என்ற நிலையில் சற்றுமுன் கிடைத்த தகவலின்படி சக்தி வீட்டுக்கு கிளம்பிவிட்டதாக கூறப்படுகிறது...