close
Choose your channels

வாக்களித்த மக்களை முட்டாளாக்கி காயத்ரியை காப்பாற்றியது ஏன்? ஸ்ரீப்ரியா அதிரடி கேள்வி

Sunday, August 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரைசாவை தவிர மற்ற ஏழு பேர்களும் கடந்த வார எவிக்சன் பட்டியலில் இருந்தனர். ஓவியாவுக்கு காயத்ரியும் சக்தியும் கொடுத்த டார்ச்சருக்கு பழிவாங்க பார்வையாளர்கள் இவர்கள் இருவரை தவிர மற்றவர்களுக்கு அதிக வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்த வாரம் வாக்குகளின் அடிப்படையில் வெளியேற்றினால் காயத்ரிதான் வெளியே செல்வார். ஆனால் திடீரென பிக்பாஸ் ஒரு டாஸ்க்கை கொடுத்து அதில் காயத்ரி வெற்றி பெறும் வகையில் எளிமையான கேள்வியை கேட்டு அதற்கு பரிசாக எவிக்சனில் இருந்து காயத்ரியை காப்பாற்றினார்.

இது வாக்களித்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது. ஏற்கனவே கமல்ஹாசன் கூட காயத்ரியிடம் கண்டிப்பாக நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில் தற்போது பிக்பாஸும் காயத்ரிக்கு ஆதரவாக செயல்பட்டது அனைவரையும் அதிருப்தி அடைய செய்தது.

இந்த நிலையில் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை ஸ்ரீப்ரியா பிக்பாஸ் வீட்டில் யார் இருக்கக்கூடாது, யார் வெளியேறினால் வீடு அமைதியாக இருக்கும் என்று கணித்து நாங்கள் வாக்களிக்கின்றோம். கடைசியில் வெள்ளிக்கிழமை டாஸ்க் என்ற பெயரில் காயத்ரியை காப்பாற்றியது ஏன் என்று பிக்பாஸிடம் ஸ்ரீப்ரியா கேள்வி கேட்டார். இந்த கேள்வியை கமல்ஹாசனும் ஆதரித்தார். இதற்கு பதில் கூறிய பிக்பாஸ், 'இது ஒரு சர்வதேச தரமான விளையாட்டு. இந்த விளையாட்டில் வெளியே சென்றவர் உள்ளே வரலாம், உள்ளே இருப்பவர்களையும் வெளியேற்றலாம். காயத்ரி காப்பாற்றப்பட்டதன் காரணம் பார்வையாளர்களுக்கு பின்னர் புரியும்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.