பல் மருத்துவரை மணக்கிறார் சரண்யா மோகன்

  • IndiaGlitz, [Monday,July 13 2015]

விஜய் நடித்த காதலுக்கு மரியாதை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமாகிய நடிகை சரண்யா மோகன், தமிழில் 'யாரடி நீ மோகினி, ஜெயம் கொண்டான் உள்பட பல படங்களில் நாயகியின் தங்கையாக நடித்தார். பின்னர் சுசீந்திரன் இயக்கிய 'வெண்ணிலா கபடிக்குழுவின் மூலம் ஹீரோயின் அந்தஸ்து பெற்று அதன் பின்னர் அழகர்சாமியின் குதிரை உள்பட ஒருசில படங்களில் நாயகியாக நடித்தார்.


இந்நிலையில் சரண்யா மோகன், திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும், மாப்பிள்ளை ஒரு பல்மருத்துவர் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த தகவலை சரண்யா மோகனே தனது அதிகாரபூர்வ வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். திருவனந்தபுரத்தை சேர்ந்த பல் மருத்துவரான அரவிந்த கிருஷ்ணா என்பவருடன் தனக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தற்போது சரண்யா மோகன், 'என்னை ஏதோ செய்துவிட்டாய்' என்ற தமிழ்ப்படத்திலும் ஒரு தெலுங்கு மற்றும் ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார். திருமணத்திற்கு முன்னர் இந்த மூன்று படங்களையும் முடித்துவிடுவார் என்றும் திருமணத்திற்கு பின்னர் நடிப்பை தொடர்வாரா? என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News

ராம்சரணுக்கு வில்லனாக மாறிய அஜீத் வில்லன்

அஜீத் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய அருண்விஜய், தற்போது 'வா டீல்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து...

தல 56' படப்பிடிப்பில் அஜீத்தை புகழ்ந்து தள்ளிய ஸ்ருதி

சமீபத்தில் இளையதளபதி விஜய்யுடன் 'புலி' படத்தில் நடித்து முடித்துள்ள ஸ்ருதிஹாசன் தற்போது அஜீத்துடன் 'தல 56'...

இறுதி நாள் படப்பிடிப்பில் பிணமாக நடித்த பெண் இயக்குனர்

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனரும் குணசித்திர...

பெங்களூர் டேய்ஸ் ரீமேக் படத்தின் டைட்டிலுக்கு சிக்கலா?

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்கான 'பாபநாசம்' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது போல், இன்னொரு சூப்பர் ஹிட் மலையாள படமான பெங்களூர் டேய்ஸ்' படத்தின் ரீமேக் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, ஸ்ரீதிவ்யா, பாபிசிம்ஹா, ராணா, பார்வதி, ராய்லட்சுமி மற்றும் சிறப்பு தோற்றத்தில் நய

இரண்டே நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது பாகுபலி

இந்திய திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் தற்போது ரூ.100 கோடி வசூல் செய்யும் படங்கள் அதிகரித்து வந்தபோதிலும், கடந்த வெள்ளியன்று ரிலீஸாகிய எஸ்.எஸ்.ராஜமவுலியின் பாகுபலி திரைப்படம், இரண்டே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து, இதுவரை இந்தியாவில் வெளிவந்த படங்களில் மிக வேகமாக ரூ.100 கோடி வசூல் செய்த படம் என்ற சாதனையை பெற்றுள்ளது......