திரையில் தான் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி: பிரபல நடிகரை விமர்சனம் செய்த நடிகை

திரையில்தான் அவர் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பிரபல நடிகரை நடிகை ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா தமிழில் ’நோட்டா’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இவர் தற்போது ’லிகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை அனன்யா பாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில் ’திரைப்படங்களில் விஜய்தேவரகொண்டா தைரியசாலியாகவும் முரடனாகவும் நடிப்பதாகவும், ஆனால் நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும், அளவோடுதான் எல்லோரிடமும் பேசுவார் என்றும், அவர் உண்டு அவர் வேலை உண்டு என அமைதியாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிப்பில் அவரிடம் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைத்தாலும், சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜ வாழ்க்கையில் காட்டுவதில்லை என்றும் தெரிவித்தார். விஜய்தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி என பேசி அனன்யா பாண்டே அவரை அவமதித்து விட்டதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

More News

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ரிலீஸ் தள்ளி போகிறதா?

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' என்ற திரைப்படம் மார்ச் மாதம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது .

பா ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் முக்கிய தகவல்!

பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான 'சார்பாட்டா பரம்பரை' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும்

நிரூப்புக்கு அபிராமி கொடுத்த அழுத்தமான முத்தம்: மீண்டும் மலர்கிறதா காதல்?

பிக்பாஸ் போட்டியாளர்களான நிரூப் மற்றும் அபிராமி ஆகிய இருவரும் முன்னாள் காதலர்கள் என்ற நிலையில் தற்போது நிரூப்புக்கு அபிராமி அழுத்தமான முத்தம் கொடுத்து உள்ளதால் மீண்டும் காதல் மலர்கிறதா?

ரசிகர்களின் இந்த செயலுக்கு நீங்கள் தான் பொறுப்பு: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை

ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகும் போது அந்த நடிகரின் ரசிகர்கள் கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது கடந்த பல ஆண்டுகளாக வழக்கமாக உள்ளது.

முதல்வரின் விழாவில் கலந்து கொள்ள ரஜினி-கமலுக்கு அழைப்பு!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் விழா ஒன்றில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.