close
Choose your channels

திரையில் தான் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி: பிரபல நடிகரை விமர்சனம் செய்த நடிகை

Friday, February 25, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திரையில்தான் அவர் ஹீரோ, நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என பிரபல நடிகரை நடிகை ஒருவர் விமர்சனம் செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகரான விஜய் தேவரகொண்டா தமிழில் ’நோட்டா’ என்ற படத்திலும் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. இவர் தற்போது ’லிகர்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’லிகர்’ படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை அனன்யா பாண்டே சமீபத்தில் அளித்த பேட்டியில் ’திரைப்படங்களில் விஜய்தேவரகொண்டா தைரியசாலியாகவும் முரடனாகவும் நடிப்பதாகவும், ஆனால் நிஜத்தில் அவர் ஒரு பயந்தாங்கொள்ளி என்றும், அளவோடுதான் எல்லோரிடமும் பேசுவார் என்றும், அவர் உண்டு அவர் வேலை உண்டு என அமைதியாக இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

நடிப்பில் அவரிடம் எனக்கு நிறைய ஒத்துழைப்பு கிடைத்தாலும், சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜ வாழ்க்கையில் காட்டுவதில்லை என்றும் தெரிவித்தார். விஜய்தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி என பேசி அனன்யா பாண்டே அவரை அவமதித்து விட்டதாக அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.