என்னை கேட்டால் சமஸ்கிருதம் தான் தேசிய மொழி என்று சொல்வேன்: பிரபல நடிகை

  • IndiaGlitz, [Saturday,April 30 2022]

ஹிந்தி தான் தேசிய மொழி என சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் கூறிய நிலையில் அதற்கு நடிகர் கிச்சா சுதீப் கொடுத்த பதிலடி திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நடிகர் அஜய் தேவ்கனுக்கு தென்னிந்திய திரைப்பட உலகினர் பலர் கண்டனம் தெரிவித்தார்கள் என்பதும், இந்தியாவில் தேசிய மொழி என்பதே கிடையாது என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் அஜய் தேவ்கான் கூறிய சர்ச்சையே இன்னும் முடியாத நிலையில் நடிகை கங்கனா ரனாவத் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ’என்னைக்கேட்டால் இந்தியாவின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் தான் சொல்வேன்’ என்று கூறியுள்ளார்.

’தமிழ், கன்னடம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளை விட சமஸ்கிருதம்தான் பழமையானது என்றும் சமஸ்கிருதத்தில் இருந்து தான் இந்த அனைத்து மொழிகளும் உருவாகியது’ என்றும் அதனால் சமஸ்கிருதம் மொழியை ஏன் இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க கூடாது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் .

நடிகை கங்கனா ரனாவத் இந்த கருத்துக்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் மாறிமாறி குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் மதுவின் செம கிளாமர் வீடியோ: இணையத்தில் வைரல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான மது, கடந்த சில நாட்களாக தனது சமூக வலைத்தளத்தில் கிளாமரான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்:  ரியோ மனைவி வெளியிட்ட புகைப்படம் வைரல்!

 திருமணத்திற்கு  சில நிமிடங்களுக்கு முன் எடுத்த புகைப்படத்தை நடிகர் ரியோவின் மனைவி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்த ராக்கிபாய்: ஆச்சரியத்தில் இந்திய திரையுலகம்

 இந்தியாவில் இதுவரை மூன்று படங்கள் மட்டுமே ஆயிரம் கோடி கிளப்பில் இருந்துவரும் நிலையில் தற்போது நான்காவதாக ராக்கி பாயின் 'கேஜிஎப் 2' படம் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

ஸ்மோக்கிங் ரூமில் இதுதான் நடந்தது: உண்மையை போட்டுடைத்த பிக்பாஸ் அபிராமி

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின்போது ஸ்மோக்கிங் ரூமில் பாலாஜி முருகதாஸ் மற்றும் அபிராமி நடந்தது குறித்து பல்வேறு வதந்திகள் சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில் அங்கு என்ன நடந்தது

எம்ஜிஆர் முதல் உதயநிதி வரை 500 படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை காலமானார்: திரையுலகினர் இரங்கல்

 எம்ஜிஆர் முதல் உதயநிதி வரை பல பிரபலங்களின் படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை சற்றுமுன் காலமானதாக தகவல் வெளியாகி உள்ளது.