சினிமாவில் அறிமுகமாகும் விஷால் பட நாயகியின் மகள்!

  • IndiaGlitz, [Friday,August 27 2021]

நடிகர் விஷால் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் மகள் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவான திரைப்படம் ’தாமிரபரணி’. இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்த பானு அதன் பின் அழகர் மலை, சட்டப்படி குற்றம், பொன்னர் சங்கர் உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தார்.

இந்த நிலையில் நடிகை பானு கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் இவருக்கு 2016ஆம் ஆண்டு கியாரா என்ற ஒரு மகள் பிறந்தார். இந்த நிலையில் தற்போது ஐந்து வயதாக இருக்கும் பானுவின் மகள் கியாரா, மலையாள திரைப்படம் ஒன்றில் நடிக்க நடித்து வருகிறார்.

மம்முட்டி நடித்த ’மாமாங்கம்’ உள்பட ஒருசில படங்களை இயக்கிய இயக்குனர் எம் பத்மகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ’பத்தாம் வளவு’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கியாரா நடித்து உள்ளார். இந்த தகவலை பானு தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே மீனாவின் மகள் நைனிகா, கொட்டாச்சியின் மகள் மானஸ்வி ஆகியோர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து வரும் நிலையில் தற்போது பானுவின் மகளும் நடிக்க வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முடிவுக்கு வந்தது ஷங்கர் பட பிரச்சனை: விரைவில் படப்பிடிப்பு

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் படம் ஒன்று நீண்டகாலமாக பிரச்சனையில் இருந்த நிலையில் தற்போது தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் முயற்சியால் அந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால்

ரூ.3 கோடி கடனுக்கு ரூ.4 கோடி வட்டி: விமல் புகாரால் தயாரிப்பாளர் மீது வழக்கு!

ரூபாய் மூன்று கோடி வாங்கிய கடனுக்காக நான்கு கோடி ரூபாய் வட்டி கட்டியதாக தன்னிடம் கூறி தன்னை ஏமாற்றியதாக தயாரிப்பாளர் மற்றும் இரண்டு பைனான்சியர்கள் மீது நடிகர் விமல் புகார்

6 மாதத்தில் 37 கிலோ உடல் எடை குறைப்பு.....! சீரியலில் சாதிக்கும் நடிகை....!

முதன் முதலாக சன் தொலைக்காட்சியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான "தேன் நிலவு" சீரியல் மூலம், சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் கிருத்திகா.

ஒரே படம் இயக்கிய தமிழ் இயக்குனர் வாங்கிய ஆடி கார்: வைரல் புகைப்படங்கள்

தமிழ் திரையுலகில் ஒரே ஒரு திரைப்படம் மட்டுமே இயக்கிய இயக்குனர் ஒருவர் ஆடி கார் வாங்கி உள்ளதன் புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன

ஊருக்குத்தான் உபதேசம்? கேப்டன் கோலியை வறுத்தெடுக்கும் முன்னாள் வீரர்!

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் கோலி சொதப்பலாக விளையாடியது குறித்து முன்னாள் வீரர் மனிந்தர் சிங் கடுமையாக விமர்சித்துள்ளார்.