close
Choose your channels

வழக்கறிஞரையும் சிறையில் அடையுங்கள்: நிர்பயா வழக்கு குறித்து பிரபல நடிகை!

Thursday, January 23, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தலைநகர் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு நிர்பயா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் வரும் பிப்ரவரி 1ஆம் தேதி அவர்கள் நால்வருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இந்த நிலையில் மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் என்பவர் ராஜீவ்காந்தி கொலையாளிகளை சோனியா காந்தி மன்னித்தது போல நிர்பயா குற்றவாளிகளையும் அவருடைய தாயார் மன்னிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் இதுகுறித்து பிரபல நடிகை கங்கனா ரணாவத் கூறியபோது ’நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங்கையும் சிறையிலடைக்க வேண்டும் என்றும் இவர் போன்றவர்களால் தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் ஆவேசமாகக் கூறியுள்ளார். கங்கனா ரனாவத்தின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos