டிக் டாக் தடை சரியா? நடிகை கஸ்தூரி கருத்து

  • IndiaGlitz, [Wednesday,April 24 2019]

டிக்டாக் செயலியை தடை செய்ய மதுரை உயர்நீதிமன்ற கிளை சமீபத்தில் உத்தரவிட்டது. ஆனால் இந்த வழக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளை வரும் ஏப்ரல் 24க்குள் தீர்ப்பளித்து முடிக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் மதுரைக்கிளை நீதிமன்றம் பிறப்பித்த தடையை உச்சநீதிமன்றம் நீக்கும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில் டிக்டாக் தடை குறித்து நேற்று நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் நடிகை கஸ்தூரி பரபரப்பான கருத்து ஒன்றை கூறினார். அவர் பேசியதாவது:

இணையதளங்களில் சுமார் 800 ஆபாச தளங்களை தடை செய்தபோது எதிர்ப்பு தெரிவித்தவர்கள் தான் இந்த டிக்டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். ஏனெனில் ஆபாச தளங்களில் யார் வீட்டு பெண்களோ நடிக்கின்றார்கள். ஆனால் டிக்டாக் செயலியில் தங்கள் வீட்டு பெண்கள் நடிக்கின்றார்கள். தங்கள் வீட்டு பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அடுத்த வீட்டு பெண்களை சுவரில் ஓட்டை போட்டு பார்ப்போம் என்று கூறுவது போல் இருக்கின்றது என்று கஸ்தூரி பேசினார்.

மேலும் டிக்டாக் செயலியில் பதிவான ஒருசில ஆபாசமான வீடியோக்களை மட்டுமே மதுரை ஐகோர்ட்டும் நாமும் பார்த்திருக்கின்றோம் என்றும், இந்த டிக்டாக் வீடியோவால் பலர் சினிமா வாய்ப்பை பெற்றுள்ளனர், பலர் தங்கள் நடிப்பு திறனை வெளிப்படுத்தி வருகின்றனர், ஏன், ஒரு கணித ஆசிரியை கணித பாடத்தை கூட டிக்டாக் செயலி மூலம் நடத்தினார். அந்த வீடியோவையெல்லாம் நாம் பார்ப்பதில்லை என்றும் கஸ்தூரி குற்றம் சாட்டினார்

கஸ்தூரியின் இந்த கருத்துக்கு பெரும்பாலான நெட்டிசன்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். ஆபாசம் அதிகம் இருப்பதாக தடை செய்ய வேண்டும் என்றால் முதலில் டிவி நிகழ்ச்சிகளைத்தான் தடை செய்ய வேண்டும் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.

More News

முன்னாள் முதல்வர் மகன் மர்ம மரணம்: மனைவியே கொலை செய்தாரா?

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் என்பவரை அவரது மனைவியே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சூர்யா 39 படத்தில் இணையும் 'விஸ்வாசம்' டெக்னிக்கல் டீம்!

சூர்யாவின் 39வது படத்தை இயக்குனர் சிவா இயக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கவுள்ளதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த ரஜினி, அஜித், விஜய் பட பிரபலம்!

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்த 'மிஸ்டர் லோக்கல்' திரைப்படம் வரும் மே மாதம்  வெளியாகவுள்ளது.

விமான நிலையத்தில் வாய்ப்பு கேட்ட ஹீரோயின்! கதாநாயகியாக மாற்றிய ராஜமௌலி!

இயக்குனர் ராஜமவுலியை, விமான நிலையத்தில் சந்தித்த போது வாய்ப்பு கேட்டதாக நடிகை ஆலியாபட் தெரிவித்துள்ளார்...

பிரபல காமெடி நடிகர் வீட்டில் கைவரிசை: 41 சவரன் நகைகள் கொள்ளை

கோலிவுட் திரையுலகில் காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் இமான் அண்ணாச்சி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'சொல்லுங்கய்யா சொல்லுங்க'