close
Choose your channels

முன்னாள் முதல்வர் மகன் மர்ம மரணம்: மனைவியே கொலை செய்தாரா?

Wednesday, April 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் என்பவரை அவரது மனைவியே கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அவரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் என்.டி.திவாரியின் மகன் ரோஹித் சேகர் கடந்த 16ஆம் தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனை செய்ததில் அவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்தது. இதனையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர்.

இந்த நிலையில் ரோஹித்தின் மனைவி அபூர்வாவை விசாரணை செய்தபோது ரோஹித்தும், அபூர்வாவும் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஒரே வீட்டில் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும், இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக அடிக்கடி சண்டை போட்டுவந்ததாகவும் தெரிய வந்தது. மேலும் அபூர்வாவுக்கு வேறொரு ஆணுடன் தொடர்பு இருப்பதாகவும், அபூர்வாவின் குடுபத்தினர் தங்கள் சொத்தை அபகரிக்க திட்டமிட்டதாகவும் ரோஹித்தின் தாயார் விசாரணையில் கூறியுள்ளார்.

இதனையடுத்து அபூர்வாவிடம் தொடர்ச்சியாக 10 மணி நேரம் மீண்டும் விசாரணை செய்த போலீசார் பின்னர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.