close
Choose your channels

2வது கணவரையும் விவாகரத்து செய்த 'மன்மதன் அம்பு' நடிகை.. தொடர்ந்து நட்பில் இருப்போம் என அறிவிப்பு..!

Wednesday, April 3, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் நடித்த ’மன்மதன் அம்பு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த நடிகை ஒருவர் தனது இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்து விட்டதாகவும் இருப்பினும் அவருடன் தொடர்ந்து நட்பில் இருப்போம் என்றும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகா நடித்த ’சினேகிதியே’ கமல்ஹாசன் நடித்த ’மன்மதன் அம்பு’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மஞ்சு பிள்ளை. இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் உள்ளார் என்பதும், இவர் பிரபலம் மலையாள இயக்குனர் பிஎஸ் பிள்ளையின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை மஞ்சு பிள்ளை, முகுந்தன் மேனன் என்பவரை முதலில் திருமணம் செய்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு சினிமா ஒளிப்பதிவாளர் ஆன சுஜித் வாசுதேவ் என்பவரை கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் திருமணமாகி 24 ஆண்டுகள் கழித்து தற்போது இருவரும் பிரிய முடிவு செய்து இருக்கின்றனர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கள் பிரிந்துவிட்டதாகவும் இருப்பினும் சுஜித் வாசுதேவனுடன் நட்புடன் இருப்பேன் என்றும் மஞ்சு பிள்ளை தெரிவித்துள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுஜித், கமல்ஹாசன் நடித்த ’பாபநாசம்’ உட்பட சில தமிழ் படங்களிலும் பல தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் ஒளிப்பதிவாளராக இருந்தார் என்பதும் இரண்டு படங்களை அவர் இயக்கி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.