close
Choose your channels

பிரபாஸின் பெற்றோர்களை சந்தித்த தமிழ் நடிகை!

Wednesday, November 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான பிரபாஸின் பெற்றோர்களை தமிழ் நடிகை ஒருவர் சந்தித்துள்ளார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

’பாகுபலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் பிரபாஸ் என்பதும் அவர் தற்போது ராதேஷ்யாம், சலார், ஆதிபுருஷ், உள்பட 5 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபாஸின் பெற்றோர்களான சூரிய நாராயண ராஜு மற்றும் சிவகுமாரி ஆகியோர்களை பிரபல தமிழ் நடிகை நந்திதா ஸ்வேதா சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான ’எம்ஜிஆர் மகன்’ என்ற திரைப்படத்தில் நடித்து இருந்த நந்திதா ஸ்வேதா தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளில் ஒருசில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.