close
Choose your channels

நடிகர் சங்கத்தில் இருந்து திடீரென விலகிய கமல், தனுஷ் பட நடிகை!

Tuesday, October 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் சசி இயக்கிய ’பூ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமான நடிகை பார்வதி, அதன் பின்னர் சரத்குமாரின் ’சென்னையில் ஒரு நாள்’ தனுஷின் ’மரியான்’ கமல்ஹாசனின் ’உத்தம வில்லன்’ உள்பட ஒருசில தமிழ் படங்களிலும் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் இன்று திடீரென மலையாள நடிகர் சங்கத்திலிருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக ’ட்வெண்டி 20’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இதில் மம்முட்டி, மோகன்லால் உட்பட மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பை நடிகர் சங்க செயலாளர் இடவேல பாபு சமீபத்தில் வெளியிட்டார். இந்த படத்தின் முதல் பாகத்தில் நடிகை பாவனா நடித்து இருந்த நிலையில் இரண்டாம் பாகத்திலும் அவர் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்த இடவேல பாபு, ’நடிகை பாவனா நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லை என்றும் இறந்தவர் எப்படி திரும்பி வர முடியும்’ என்றும் கூறினார். உயிரோடு இருக்கும் நடிகை ஒருவரை இறந்தவருடன் ஒப்பிட்டதால் ஆவேசமான நடிகை பார்வதி உடனடியாக நடிகர் சங்கத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதனால் மலையாள நடிகர் சங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.