close
Choose your channels

நெட்பிளிக்ஸில் இருந்து 'அன்னபூரணி' நீக்கம்.. பிரபல நடிகை கூறிய ஆவேசமான கருத்து..!

Friday, January 12, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் நேற்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து பிரபல நடிகை ஒருவர் தனது ஆவேசமான கருத்தை தெரிவித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த ‘அன்னபூரணி’ என்ற திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. இந்த படத்தில் ராமர் அசைவம் சாப்பிட்டுள்ளார் என்ற வசனம் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டிருந்த நிலையில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.

இதனை அடுத்து நெட்பிளிக்ஸ் நிறுவனம் ‘அன்னபூரணி’ படத்தை தங்களது ஓடிடியில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. மேலும் உடனடியாக இந்த படம் மீண்டும் சர்ச்சைக்குரிய காட்சிகளை எடிட் செய்யும் வரை தங்களது ஓடிடியில் இருக்காது என்றும் அறிவித்திருந்தது.

நெட்பிளிக்ஸ் நிர்வாகத்தின் இந்த அறிவிப்புக்கு நடிகை பார்வதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘என்னை அறிந்தால்’, ‘உத்தமவில்லைன்’ உள்பட பல படங்களில் நடித்த பார்வதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘ஒரு ஆபத்தான முன்னுதாரணம் அமைக்கப்படுகிறது. யார் வேண்டுமானாலும் எடிட் செய்யலாம் என்ற நிலை விரும்பத்தக்கது அல்ல’ என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment