close
Choose your channels

அணையில் எடுத்த ஆபாச வீடியோ: பிரபல நடிகை கைது!

Thursday, November 5, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோவா மாநிலத்தில் உள்ள அணை ஒன்றில் ஆபாச வீடியோ எடுத்ததாக பிரபல நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகை பூனம் பாண்டே சமீபத்தில் சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்திற்குப் பின்னர் திடீரென தனது கணவர் மீது பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் என்பதும் தெரிந்ததே. மேலும் அவர் தனது கணவருடன் சமாதானம் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது

திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பூனம் பாண்டே தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார். அவரது பதிவுக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது

இந்த நிலையில் கோவாவில் ஆபாச வீடியோ எடுத்ததாக அம்மாநில போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் சாம் பாம்பே என்பவரைத் திருமணம் செய்துகொண்ட பூனம் பாண்டே தேனிலவுக்காக கணவருடன் கோவா சென்றதாகவும், கோவாவில் உள்ள நீர்த்தேக்கம் ஒன்றில் நின்று கொண்டு ஒவ்வொரு ஆடைகளாக களைந்து நிர்வாணமாக போஸ் கொடுப்பது போன்ற வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்ததாகவும் தெரிகிறது

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வீடியோவுக்கு பலர் கண்டனம் தெரிவித்ததோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்ததாக பூனம் பாண்டே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் அடிப்படையில் பூனம் பாண்டே கைதாகலாம் என்று ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.