'சிங்கம்' பட பாணியில் போதை மருந்து சப்ளை: நடிகை ராகினி திவேதி அதிர்ச்சி வாக்குமூலம்


Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களாக கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இதுகுறித்து வழக்கில் நடிகை ராகிணி திவேதி சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் இன்னொரு பிரபல நடிகையிடம் போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகை ராகினி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்த நிலையில் அவரிடம் இருந்து பல திடுக்கிடும் தகவல்கள் வாக்குமூலம் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிகிறது.
இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ’ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த 33 வயது சம்பா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சூர்யா நடித்த ’சிங்கம் 2’ படத்தின் பாணியில் ஆப்பிரிக்காவிலிருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்து உள்ளூரில் உள்ள பிரபலங்களிடம் சம்பா போதை மருந்துகளை சப்ளை செய்துள்ளது ராகினி திவேதியின் வாக்குமூலம் மூலம் தெரியவந்தது.
மேலும் திரை உலகினர் கலந்துகொண்ட விருந்துகளில் மட்டுமின்றி அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சிகளிலும் சம்பா என்பவர் போதை பொருளை சப்ளை செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரத்தில் மேலும் சில பிரபலங்கள் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments