பிறந்தநாள் வாழ்த்துகள் ரம்பா…  வியப்பூட்டும் குட்டி பயோகிராபி!

  • IndiaGlitz, [Saturday,June 05 2021]

90களில் வெளியான திரைப்படங்களில் அதிகம் விரும்பப்பட்ட ஒரு முகம் நடிகை ரம்பா. அந்த அளவிற்கு தனது அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டவர். இதனால் “தொடையழகி” என்ற விசித்திரமான பட்டத்தையும் ரசிகர்கள் அவருக்கு வழங்கி இருந்தனர். விஜய், அஜித், கார்த்தி, விஜயகாந்த் எனப் பல ஹீரோக்களுடன் இணைந்து நடித்த அவர் தற்போது கணவர், 3 குழந்தைகள் என ஒரு அழகான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவருடைய பிறந்த நாளில் அவரைப் பற்றிய ஒரு குட்டித் தொகுப்பு.

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் 7 ஆம் வகுப்பு படிக்கும்போதே தனது பள்ளி விழா ஒன்றில் அம்மன் வேடம் அணிந்து வந்திருந்த விருந்தினர்களை அசத்தினார். அந்த விழாவிற்கு இயக்குநர் ஹரிஹரனும் வந்து இருந்தார். இந்த அறிமுகம் அவரை சினிமாவிற்குள் அழைத்து வந்தது. இதனால் கடந்த 1992 ஆம் ஆண்டு “சர்க்கம்” எனும் மலையாளப் படத்தில் அம்ரிதா எனும் பெயருடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். பின்பு “சம்பக்குளம் தச்சன்” எனும் படத்திலும் நடித்து இருந்தார்.

அதேநேரத்தில் தெலுங்கு சினிமாவில் நடிகர் வினீத்துக்கு ஜோடியாக கடந்த 1993 ஆம் ஆண்டு “ஆ ஒக்கடு அடக்கு“ எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதையடுத்து தமிழில் இயக்குநர் கதிர் இயக்கத்தில் கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான “உழவன்” படத்தில் முதன் முதலாக ரம்பா என்ற பெயருடன் அறிமுகமானார். அதற்குப் பின்பு இவரது சினிமா வாழ்க்கையில் எல்லாம் ஏறுமுகம்தான்.

நடிகர் கார்த்தியுடன் “உள்ளத்தை அள்ளித்தா” படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கிறங்க வைத்து விட்டார். பின்பு நடிகர் விஜய்யுடன் “மின்சார கண்ணா”, நினைத்தேன் வந்தாய்“, சுக்ரன்”, என்றென்றும் காதல்” போன்ற திரைப்படத்தில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார். மேலும் நடிகர் கார்த்தியுடன் “அழகான நாட்கள்”. உனக்காக எல்லாம் உனக்காக” போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

மேலும் நடிகர் அஜித்துடன் “ராசி’‘ திரைப்படத்திலும் நடிகர் அர்ஜுனுடன் இணைந்து “செங்கோட்டை” திரைப்படத்திலும் நடித்தார். அதேபோல மூத்த நடிகர் விஜயகாந்துடன் இணைந்து “தர்மச் சக்கரம்” திரைப்படத்திலும் சூப்பர் ஸ்டார் நடித்த “அண்ணாமலை” திரைப்படத்திலும் இவர் நடித்து இருந்தார். இதைத்தவிர தொலைக்காட்சிகளில் “மானாட மயிலாட” போன்ற நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து ரசிகர்களை மகிழவைத்தார்.

தமிழ் சினிமாவைத் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, போஜ்பூரி மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரம்பா. இந்நிலையில் கடந்த 2010 ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரக்குமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கடனாவில் செட்டில் ஆகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தம்பதிகளுக்கு லான்யா, ஷாஷா என்று இரு மகள்களும், ஷிவின் என்ற மகனும் உள்ளனர். இன்று (ஜுன் 7) நடிகை ரம்பா தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்.

More News

மும்பையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 தமிழ் நடிகைகள்: மூவர் கைது

இரண்டு தமிழ் நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய மூவர் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நடிகையுடன் கிளாமர் போஸ்: வைரலாகும் ராம்கோபால்வர்மா புகைப்படம்

ஒரு காலத்தில் அதிரடி ஆக்ஷன் படங்களை இயக்கி வந்த பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தற்போது அதிரடியாக கிளாமர் படங்களை இயக்கி வருகிறார். அவரது படங்கள் ஓடிடியில் நல்ல வரவேற்ப்பை பெற்று

வெங்கையா நாயுடு டுவிட்டர் புளூ டிக் சர்ச்சை...! என்ன ஆச்சு...!

குடியரசுத்தலைவர் வெங்கையா நாயடு-வின், டுவிட்டர் கணக்கில் இருந்து ப்ளு டிக் நீக்கப்பட்டதாக கிளம்பிய சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

சிம்பு, தனுஷ் நாயகியின் குழந்தை புகைப்படம்: ரசிகர்கள் வாழ்த்து!

சிம்பு நடித்த 'ஒஸ்தி' தனுஷ் நடித்த 'மயக்கம் என்ன' உள்பட ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் ஒரு சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நடிகை ரிச்சா.

நேற்று சமத்துப் பொண்ணு… ஆனால் இன்று… வைரலாகும் ஆலியா பட்டின் க்யூட் புகைப்படம்!

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட் நேற்று தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.