பீர் ஆரோக்கிய பானம் என்றால் மருந்துக்கடையில் விற்பீர்களா? அமைச்சருக்கு பிரபல நடிகை கேள்வி

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

தமிழகம் போலவே நமது அண்டை மாநிலமான ஆந்திரபிரதேசத்திலும் மதுவுக்கு எதிராக பொதுமக்களும் எதிர்க்கட்சிகளும் போராடி வருகின்றன. இந்த நிலையில் ஆந்திர கலால் துறை அமைச்சர் கே.எஸ்.ஜவஹர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'பீர் ஆரோக்கிய பானம் இல்லை என யார் சொன்னது? அது ஆரோக்கிய பானம் தான் என்பதை நிரூபிக்க நான் தயாராக உள்ளேன் என கூறினார். அமைச்சரின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் பிரபல நடிகையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏவுமான ரோஜா, அமைச்சரின் இந்த சர்ச்சை பேச்சுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். 'பீர் ஆரோக்கிய பானம் என்றால் அதை மருந்து கடைகளில் விற்பார்களா? என்று கேள்வி எழுப்பிய நடிகை ரோஜா, அரசு மது விற்பனையை ஊக்குவித்து வருவதாகவும், மக்கள் மீது அக்கறை இல்லாத அரசு என்றும், மாநில வருவாயை பெருக்க மது விற்பனைதான் ஒரே வழி என்று முடிவு செய்துவிட்டதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுவிற்பனைக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளதால் அந்த சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றி மது விற்பனையை ஆந்திர அரசு செய்து வருவதாக நடிகை ரோஜா குற்றஞ்சாட்டியுள்ளார்.

More News

பாவனா வழக்கில் திடீர் திருப்பம்: கைதாகும் பிரபலங்கள்?

பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் விரைவில் மலையாள சினிமாவின் நட்சத்திர ஜோடி திலீப்-காவ்யா மாதவன் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.,

ஆதார் இருந்தால்தான் திருமணம்! மத்திய அரசின் அடுத்த அதிரடி

கடந்த சில மாதங்களாகவே இந்திய குடிமகனின் அடையாள அட்டையான ஆதார் அட்டை எண்ணை அனைத்து முக்கிய ஆவணங்களிலும் இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. ரேசன் கார்டு, பாஸ்போர்ட், வங்கிக்கணக்கு, பான் அட்டை உள்பட பல ஆவணங்களில் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது...

கேளிக்கை வரி விவகாரம்: லைகா நிறுவனம் அதிரடி முடிவு

கடந்த 1ஆம் தேதி ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்ததில் இருந்தே தமிழ்த்திரையுலகம் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. ஜிஎஸ்டி வரி மட்டுமின்றி தமிழக அரசின் 30% வரியும் கட்ட வேண்டிய நிலை திரையுலகினர்களுக்கு ஏற்பட்டுள்ளதால் கமல், ரஜினி உள்பட ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரட்டை வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்...

ரூ.500க்கு 4ஜி வோல்ட் இ போன்; ஜியோவின் அடுத்த ஆஃபர்

இந்திய தொலைத்தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்திய நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ.

ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்குத்தான் ஆபத்து: சுப்பிரமணியம் சுவாமி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ரசிகர்களை சந்தித்தபோது அரசியலுக்கு வருவது குறித்து மறைமுகமாக பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.