close
Choose your channels

பாவனா வழக்கில் திடீர் திருப்பம்: கைதாகும் பிரபலங்கள்?

Wednesday, July 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல தமிழ், மலையாள நடிகை பாவனா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் காரில் கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு ஆளான வழக்கில் விரைவில் மலையாள சினிமாவின் நட்சத்திர ஜோடி திலீப்-காவ்யா மாதவன் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது.,
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் பல்சர் சுனி நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரை பேட்டி எடுக்க செய்தியாளர்கள் முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்துவிட்டனர். இருப்பினும் பல்சர் சுனி, 'இந்த வழக்கில் விரைவில் பெரிய ஆட்கள் சிக்குவார்கள்' என்று மட்டும் கூறினார்
பாவனா வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே திலீப் மீது போலீசாரின் சந்தேகம் இருந்தது. அவரிடமும், அவரது மனைவியும் நடிகையுமான காவ்யா மாதவனிடமும் ஏற்கனவே போலீசார் விசாரணை செய்துள்ள நிலையில் மீண்டும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளனர்.
மேலும் பாவனாவை ஆபாசமாக படம் பிடித்த செல்போனில் இருந்த மெமரி கார்டை காவ்யா மாதவனின் நிறுவனத்தில் ஒப்படைத்ததாக போலீஸ் விசாரணையின்போது பல்சர் சுனி தெரிவித்துள்ளதாகவும் இதனால் திலீப், அவருடைய மேலாளர் அப்புண்ணி, இயக்குனர் நாதிர்ஷா, காவ்யா மாதவன் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் திலீப், காவ்யா மாதவன் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இருவரும் தலைமறைவாகியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
சினிமா திரைக்கதையை விட விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த வழக்கில், ஆச்சரியத்தக்க கிளைமாக்ஸ் இருக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.