போதைப்பொருள் விவகாரம்: பிரபல நடிகை திடீர் தலைமறைவு

  • IndiaGlitz, [Thursday,October 22 2020]

பாலிவுட் மற்றும் கன்னட திரையுலகில் போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. ஏற்கனவே பாலிவுட் நடிகை ரியா சக்கரவர்த்தி கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நடிகைகள் ரகுல் ப்ரீத்தி சிங், தீபிகா படுகோன், ஷரதா கபூர் மற்றும் சாரா அலிகான் ஆகியோர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல தெலுங்கு மற்றும் பாலிவுட் நடிகை சப்னா பாப்பி என்பவருக்கும் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் வெளிவந்தது. இதனை அடுத்து அவரிடம் விசாரணை செய்ய அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று அவர் போதைப்பொருள் அதிகாரிகளுக்கு முன் ஆஜராக வேண்டிய நிலையில் திடீரென தலைமறைவாகி உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. லண்டனில் பிறந்து வளர்ந்த சப்னா பாப்பி திடீரென தலைமறைவாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சுஷாந்த்சிங் நடித்த ’டிரைவ்’ உள்பட ஒருசில பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களிலும் வெப்சீரீஸ், தொலைக்காட்சி தொடர்களிலும் சப்னா பாப்பி நடித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது

More News

கால்வாயில் மிதந்த 17 வயது இளம்பெண்ணின் நிர்வாண உடல்: பொதுமக்கள் அதிர்ச்சி!

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ராஸ் என்ற பகுதியில் சமீபத்தில் இளம் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டதன் அதிர்ச்சியே இன்னும் நீங்காத

இரும்பு பெண்மணியே, உங்கள் ரகசியம் என்ன? குஷ்புவிடம் கஸ்தூரி கேட்ட கேள்வி

சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு பாஜக கட்சி பணிகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார். இதனால் தனக்கு கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதால்

8 மணி நேரம், 18 நடிகர்கள்: ஒரே ஷாட்டில் ஒரு தமிழ்ப்படம்!

தமிழ் திரையுலகில் உருவான திரைப்படங்கள் பல்வேறு புதிய சாதனைகளை படைத்துள்ளது என்பது தெரிந்ததே. வசனமே இல்லாத 'பேசும்படம்', பாடல்களே இல்லாத 'அந்த நாள்',

கண்ணீர் சிந்தாமல் வெங்காயம்… எகிப்து வெங்காயத்தின் வருகையால் விலை குறையுமா!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி சமயத்தில் வெங்காயத்தின் விலை ரூ.100 ஐ தொடும் அளவிற்கு அதிகரிப்பது ஒரு வழக்கமான விஷயமாகவே இருந்து வருகிறது

இந்தியாவில் முதல் முறையாக… தமிழகத்தில் இலவசமாகக் கொரோனா தடுப்பூசி!!!

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்ட உடன் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் எனத் தமிழக முதல்வர்