close
Choose your channels

பணத்தை திருடிய நபர் தெரிந்தும் மனிதாபிமானமாக நடந்து கொண்ட கமல்-ரஜினி பட நடிகை..!

Friday, July 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தன்னுடைய வீட்டில் பணம் திருடு போனதை அடுத்து அந்த திருட்டை செய்வது யார் என்பதை கண்டுபிடித்த பின்னரும் மனிதாபிமானமாக காவல்துறையினரிடம் வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என கமல், ரஜினி பட நடிகை கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

கமல்ஹாசன் நடித்த ’எனக்குள் ஒருவன்’ ரஜினிகாந்த் நடித்த ’தளபதி’ உள்பட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஷோபனா. இவர் தனது தாயாருடன் சென்னை தேனாம்பேட்டையில் வசித்து வரும் நிலையில் அவரது வீட்டில் திடீரென பணம் காணாமல் போனதாக தெரிகிறது

இதனை அடுத்து தனது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் விஜயா மீது ஷோபனாவுக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனை அடுத்து அவர் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் காவல்துறையினர் வந்து விசாரணை செய்தபோது பணிப்பெண் விஜயா, தான் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்

ஷோபனா வீட்டில் திருடிய பணத்தை பணிப்பெண் விஜயா தனது மகள் வங்கி கணக்கிற்கு அனுப்புவதற்கு டிரைவர் இடம் தான் கொடுத்ததாகவும், டிரைவர் ஜிபே மூலம் அவரது மகளுக்கு பணம் அனுப்பி உள்ளது போலீஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து பணிப்பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஷோபனா கூறியதாகவும் அவர் தொடர்ந்து தனது வீட்டில் வேலை பார்க்கட்டும் திருடிய பணத்தை அவரது சம்பளத்தில் இருந்து பிடித்துக் கொள்வதாகவும் கூறியதாகவும் தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.